Share

Oct 2, 2017

ஊள அழுகையும் நாலு ஒருதலைக் காதலும்


புதுசா ஒரு படம். சகோதர பாசம் தான் படத்தின் Key note. டி.ராஜேந்தரும் சினேகனும் அண்ணன் தம்பியாக.
ஜூலியும் சுஜாவும் அண்ணன் தம்பிகளை பிரிக்க சதி செய்கிறார்கள்.
 ச்ச்சீ.. பச்சைத்துரோகம்….
டி.ஆரும் சினேகனும் கட்டிப்புடிச்சி ’தம்பி’, ’அண்ணே’ன்னு கண்ணு கலங்கி அழுது, அழுது முகம் வீங்கி, மூக்கு ஈரமாகி…

அப்படியே கேமராவ மேல தூக்குறோம். ’ஜோ’ன்னு ஒரே மழை.... உலகமே இந்த ரெண்டு பேருக்காக அழுகுது!
ஒரு காட்சி புதுமையாக இடையில். வைகோ தனக்கும் அண்ணன் கருணாநிதிக்கும் உள்ள சகோதர பாசம் பற்றியும் மற்றும் தனக்கும் தம்பி பிரபாகரனுக்கும் உள்ள ரத்த பாசத்தையும் பற்றி தேம்பித் தேம்பி அழுதவாறு பேசுவது போல. கௌரவ நடிகர்.

ஜூலிக்கும் சுஜாவுக்கும் இது வரை தமிழ்த்திரை கண்டிராத ஒரு போட்டி டான்ஸ்.
சங்கு சக்கரமா சுத்தி “ சாதுர்யம் பேசாதடி, என் சதங்கைக்கு பதில் சொல்லடி”

திடீரென்று ட்விஸ்ட். ஒருதலை காதல்.

ஜுலி: அவன் கண்ண பாத்தேன். என்னமோ செய்யுது. என்னன்னு எனக்கு சொல்லத்தெரியல. பிடிச்சிருக்கான்னு சொல்லத்தெரியல. தெரியல

ஜூலி டி.ஆரை லவ் பண்ணுகிறாள். டி.ஆருக்கு லவ் சுஜா மீது. சுஜா சினேகனை காதலிக்கிறாள். சினேகன் காதல்,மையல் எல்லாம் ஜூலி மேலே. கைக்கிளைக்காமம்.
A chain of one side love!

Midsummer night’s dream.
What fools these mortals be. 

லைசாண்டர், டிமிட்ரியஸ், ஹெர்மியா, ஹெலினா…
To say the truth,
reason and love
Keep little company together nowadays.

படத்துக்கு பெயர் –் ஊள அழுகையும் நாலு ஒருதலைக் காதலும்


…………………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.