Share

May 23, 2017

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா...


ரஜினியின் பிரகடனம் – ’அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். போருக்கு தயாராகுங்கள்.’

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா யாருக்கு நஷ்டம்?

 ’கீழ்த்தரமான தமிழர்கள்’ என்று நீ சொன்னால் உடனே,உடனே ஒரு சல்லிப்பயல் ‘மராட்டிய நாயே’ என்று தானே பதிலடி கொடுப்பான்?

ரஜினி அரசியலுக்கு அவருடைய உடல் நிலையே முதல் எதிரி. முதல் எதிர்ப்பு அவருடைய சீர் குன்றிய உடல் நிலை மூலமே என்பது எப்படி மூலதனம் ஆகக்கூடும்?

சிங்கப்பூர் வைத்தியத்தில் மீண்ட ரஜினி. சினிமாவில் அதன் பிறகு இவரை வைக்கோல் கன்றுக்குட்டியாக வைத்துக்கொண்டு பணம் கறக்கிற வேலை நடந்தது. இப்போது வாக்கு கறக்க பயன்படுத்த முடியுமா என்றும் பரிசோதனை ஆரம்பம்.

ரஜினியின் எச்சரிக்கை – ‘பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்களை பக்கத்திலேயே நெருங்க விடப்போவதில்லை.’
அவர் வீட்டுப்பெண்கள் மூலம் தான் அவருடைய இந்த எச்சரிக்கைக்கு ஆபத்து இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவர் கௌரவத்திற்கு பங்கமாக அகலக்கால் வைத்து மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் பொருளாதார சிக்கல்களை எப்படியெல்லாம் உண்டாக்கி சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜயகாந்தை விட ரஜினி  நூறு மடங்கு மேல். செல்வாக்கு, அந்தஸ்து, பிரபலம் என எப்படிப் பார்த்தாலும் ரஜினி சினிமா நடிகராகவே ரொம்ப,ரொம்ப பெருமைப்படும்படியான நிலை தான்.
அரசியல் பிரமுகராகவே தே.மு.தி.க தலைவரை விட இவருக்கு யோக்யதை அதிகம்.


இப்படி சொல்வது ரஜினிக்கான சிவப்பு கம்பளமல்ல.
எந்த செல்வாக்குமேயில்லாமல், தகுதியுமில்லாமல் அரசியல் உலகில் விஜயகாந்த் தமிழகத் தலைவர்களை பயமுறுத்த முடிந்திருக்கிறது. ரஜினிக்கென்ன? தங்காத்து!

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழக மக்கள் ரொம்ப வருடங்களுக்கு முன்னரே விரும்பவில்லை.

1996ல் அரசியல் மாற்றத்துக்கு தன்னை காரணமாக அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளும் ரஜினி 2004ல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்கச் சொன்ன போது என்ன நடந்தது என்பதை ஏன் கவனமாக மறக்க வேண்டும். Selective Amnesia!

அதிமுக, திமுக இருதுருவ அரசியலை அசைக்க முடியுமா?
மெரினா கடற்கரை கிளர்ச்சி, நெடுவாசல் போராட்டம், தாஸ்மாக் கடைகளின் மீதான தாய்மார்களின் ஆவேச தாக்குதல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலிறகால் வருடுவது போல நம்பிக்கைக் கீற்று தெரிகிறது.

இந்த நிலையில் ’வந்தேன்டா, புது ஆட்டம் கட்டி ஆடப்போறேன்’ என்று ரஜினியின் எண்ட்ரி?
’கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர் வெள்ளை’ என்று அடுத்த கூத்து துவங்குகிறது.
புது கனவு, புது பாதை, காட்டப்போவதான பாவ்லா.
உட்டோப்பியா, எல் டொரடா கானல் அரசியல்.



எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலில் இது வரை பொல்லாச்சிறகை விரித்த சினிமா நடிகர்களின் வரிசையில் இன்று ரஜினி!
மற்ற நடிகர்கள் போல் வெத்து வேட்டு அல்ல. விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் போல வெத்து வேட்டு அல்ல என்றாலும் ரொம்ப லேட்டு.


இப்பவே ஒரு ஜாதிக்கட்சி தலைவர் பதற்றத்துடன் தூண்டில் போடுகிறார் -’பி.ஜே.பியில சேர்ந்திடாதீங்க’
அமித் ஷா பிஜேபியில சேரச்சொல்கிறார்.

எப்படியோ! தமிழர்கள் ’பப்பள, பள,பள,பள’ ஜிகினா காட்சிகள் காண இருக்கிறார்கள். மீடியா, பிரேக்கிங் நியூஸ் என்று சரியான எண்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கிறது. ’ஜனங்களின் நல்லதிற்கான கூட்டணி’ கனவுகளுடன் நம் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகி அடுத்த ரவுண்டு வருவார்கள். விஜய்காந்தையே தலைக்கு மேல் தூக்கி கொண்டாடிய கம்யூனிஸ்ட்களுக்கும், மற்ற அரசியல் பிழைப்பவர்களுக்கும் ரஜினி பெரிய ரட்சகராயிற்றே!

தும்பிக்கய ஊனி, நாலு காலையும் மேல தூக்கி சங்கு சக்கரமா, பம்பரமா சுத்தினால், வேடிக்கை பார்க்கும் பொது ஜனங்கள், கட்சிகளின் தொண்டர்கள் எல்லோருமே கைய தட்டி ஆரவாரம் செய்து, ’வாழ்க’ கோஷம் போட்டு குஷியாகி விட மாட்டார்களா?
இந்தியாவில் எந்த சுகமும் காணாமல் கட்சித்தொண்டர்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு lunatic fanaticism உண்டா!
தனி மனித வழிபாட்டு குதூகலத்திற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

.........................................................

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_07.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4726.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_5351.html



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.