Share

Nov 30, 2016

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’


மனுஷ்யபுத்திரன் ’விகடன் தடம்’ அக்டோபர் இதழில்  "கவிதை பற்றிய பார்வைகள்" கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன்.’ என்று எழுதியிருப்பதால் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

எழுத்து பத்திரிக்கையில் பிரசுர வாய்ப்புக்காக ஞானக்கூத்தன் ஐந்து கவிதைகளை சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்திருந்தார். கவிதைகள் பிரசுரிக்கப்படவேயில்லை. கவிதைகளில் இலக்கணம் இருக்கிறதாக சி.சு.செல்லப்பாவின் அபிப்ராயம்.

சி.மணி, ந.முத்துசாமி முயற்சியில் ’நடை’ பத்திரிக்கை கோ.கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்டு 1968ல் துவக்கப்பட்டது.

சி.சு.செல்லப்பாவிடம் இருந்த ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகளை ந.முத்துசாமி போய் வாங்கி வந்தார். 
மீட்கப்பட்ட(!) அந்த ஐந்து கவிதைகளும் ’நடை’ முதல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஞானக்கூத்தனுக்கு பிள்ளையார் சுழி.

அதன் பிறகு தான் 1970ல் ’கசடதபற’ பத்திரிக்கையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பிரசுரமாயின.
’நடை’ தான் கசடதபற இதழுக்கு முன்னரே நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ’நடை’ மூலம் ஞானக்கூத்தன் உருவாகி வந்தார். கசடதபற பங்களிப்பை மறுக்கவில்லை.
..........................
ஒரு நல்ல ஜோக்

பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆரம்ப காலத்தில் தன் பெயரை ’இரவீந்திரன்’ என்று தான் எழுதி வந்துள்ளார்.
’இ’ரவீந்திரன்.
ஒரு அமெரிக்க பெண் தமிழ் கற்றுக்கொள்ள மதுரை யுனிவர்சிட்டிக்கு வந்தவள்
இவர் பெயரை ” இரவு இந்திரன்” என்று உச்சரித்திருக்கிறாள்! அப்புறம் தான் தன் பெயரில் உள்ள ’இ’ யை ’நீக்கல்’ செய்து விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.