Share

Oct 16, 2016

உதயசூரியன்



கி.அ.சச்சிதானந்தம் என்றாலே மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம் யாருக்கும் வராமலிருக்காது. மௌனியைப் பிரபலப்படுத்தியதில் இவருடைய பங்கு பெரியது.

 சச்சிதானந்தத்தின் இமயமலை Trekking மறக்கமுடியாது. இமயமலை நடைப்பயணத்திற்கான ஆயத்தத்திற்காக எவ்வளவோ காலம் தினமும் கோபாலபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு தினமும் நடந்து போய்விட்டு திரும்பி வந்திருக்கிறார்.
சிறந்த மொழி பெயர்ப்பாளர். பெக்கட் எழுதிய ”Waiting for Godat"  நாடகத்தை 
( கோடாவுக்காக காத்திருத்தல்) அழகாக மொழிபெயர்த்தவர்.
ந.முத்துசாமியின் ஐம்பதாண்டு கால நண்பர். ஓவியர் மு. நடேஷ் இவரைப்பார்த்ததும் உற்சாகமாகி 

“நடமாடும் சிறுகதை!” என்பார். பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரனின் உற்ற தோழர் சச்சிதானந்தம்.


இங்கே நான் சொல்ல வருவது தமிழக அரசியல் சம்பந்தப்பட்டது.
Don’t be too surprised by what you hear. One can’t be sure about anything these days. Just giving it to you as I hear it.
மு.கருணாநிதி ஒரு காலத்தில் சச்சிதானந்தத்தின் வீட்டில், மாடியில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.

ஒரு முறை சி.என்.அண்ணாத்துரை அந்த வீட்டிற்கு கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார்.

வீட்டின் ’கேட்’ இவர் கையினால் திறக்கப்படுகிறது. மாடியேறிப் போய் கருணாநிதியை பார்த்து விட்டு கீழே இறங்கியவர் வீட்டு கேட்டில் உதய சூரியன் வடிவமைக்கப்பட்டிருப்பதை நின்று உற்று கவனிக்கிறார்.
There is a silver lining out there, if we just step back and take a fresh look!
ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல மீண்டும் மாடியேறி மூக்குப்பொடியை உறிஞ்சியவாறு கருணாநிதியை பார்த்து விட்டு அண்ணா சொல்லியிருக்கிறார்.
”நம் கட்சி திமுகவுக்கு சின்னம் உறுதி செய்து விட்டேன்.
உதய சூரியன்!”

உடனே,உடனே Power Monger கருணாநிதியின் எண்ண ஓட்டம் இப்படி இருந்திருக்குமோ? ”Let not ’the rising sun’ see my black and deep desires!”
மேக்பத் வார்த்தைகள் : Let not light see my black and deep desires.
…………………………………




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.