Share

Aug 8, 2016

எடுத்துக்கூறுவது



ஸ்பெயின் நாட்டில் 65 வயதிற்கு அதிகமானவர்கள் உடலுறவு கொள்வதில் தீவிரமாக உள்ளதாக ஒரு செய்தி. ஏன் இது எல்லா நாட்டிற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கக்கூடாதா?

சந்தோஷம் என்பது ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறாக இருக்கும். குஷ்வந்த் சிங் 90 வயது வாக்கில் தெளிவாகச் சொன்னார்: ’குசு விடுவது தான் ஆகச்சிறந்த ஆனந்தம். நீண்ட, திருப்தியான குசு விடுகிற பாக்கியம்! I do not desire sex; instead I pray for a long, satisfying fart. Farting is one of the greatest joys of life. Farting now tops my list of life’s pleasures.’
Art is fart! இது ஒரு புறமிருக்க குஷ்வந்த்சிங்குக்கு Fart is art!


ஒரு விஷயத்தை தீர்மானமாகச் சொன்ன பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பினால் அதே விஷயத்தை தீர்மானமாக அப்படியே சொல்வது சிரமம். கடும் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்டாலும் கூட, தான் முன்னர் சொன்னதிலிருந்து மாறாமல் கருத்தை வெளியிட முடியுமா?

ஆங்கில நாடகாசிரியர் ஷெரிடன் இதனை கவனமாக செய்தார்.
நாடாளுமன்றத்தில் ஒருமுறை பேசிய போது ‘இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள்’ என்றார்.
’நீ பேசியதை வாபஸ் வாங்கு,மன்னிப்பு கேள் ’ – கூச்சல்
ஷெரிடன் அமைதியாக “ மன்னிக்கவேண்டும். இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள் அல்ல.”


லட்சுமி கல்யாணம் என்ற ஒரு படத்தில் சிவாஜி பாடல் “யாரடா மனிதன் இங்கே, கூட்டி வா அவனை இங்கே, இறைவன் படைப்பில் விலங்கு தான் மீதி இங்கே”
’நான் ஏன் பிறந்தேன்’ எம்.ஜி.ஆர் பாடலில் “ ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம். மனிதன் எங்கே காணவில்லை. தேடுகிறேன் நான் என்றானாம்”


’ஏழையாய் இருந்தால் என்ன? ஏழைக்கு கிடைக்கிற சந்தோஷம் பணக்காரனுக்கு கிடைக்காது’ என்பதை நம்பவே கூடாது. ’Poor but happy’ is not a phrase invented by a poor person.
பெர்டோல்ட் ப்ரக்ட் அபிப்ராயப்படுகிறார்: ‘Poverty makes you wise, but it’s a curse.’
ஆமாம் Curse தான்.
Tragedy does make me more sensitive, but it also makes me more cautious.
“கடந்து போன நாட்களைப் பற்றி நினைத்துப் பார்க்க ஒவ்வொரு காலத்திலும் ஒரு தனிச்சின்னம் கிடைக்கிறது” – அசோகமித்திரனால் இப்படி தெளிவாக எழுத முடிகிறது.



பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன். கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.

கீட்ஸ் வித்துவச் செருக்கோடு தன்னையும் பைரனையும் வகைப்படுத்துவது இப்படி – “You speak of Lord Byron and me!? There is this great differnce between us. He describes what he sees – I describe what I imagine – Mine is the hardest task.”



பெயர் சொல்லிக்கூப்பிட்டவுடன் வருகிற ஒரே பறவை காக்கா!
கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை “அயர்ச்சியில் ஒரு காக்கை”

’கடலின் அலைகளுக்குக் கிட்டும் தொலைவில்
கிடந்தது ஒரு பெரிய மாட்டின் எலும்புக்கூடு
எலும்புக்கூட்டின் மேல் வந்தமர்ந்த
காக்கைக்குத் திகைப்பு
யார் தான் தின்றார்கள் முழுமாட்டை?’


கவிஞனைப் பற்றி ‘பல மரணஸ்தர்’ என்பார் ஞானக்கூத்தன்.
‘இரு முறை பிறப்பதாய் சொல்லப்படுகின்ற
அந்தணர் கூட ஒரு முறை தான் இறப்பார்.
ஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.
எல்லோரையும் போல ஒரு முறை. மற்றவர்
படிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை’


சமீபத்தில் மூன்று பதிவுகளில் ஞானக்கூத்தனின் கவிதைகளை குறிப்பிட நேர்ந்த போது அவரது மரணம் மிக, மிக சமீபத்தில் இருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
…………………………………….

1 comment:

  1. இவர்தான் குசுவந்த சிங்கா!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.