Share

Aug 25, 2016

அசந்தர்ப்ப நிர்ப்பந்தம்


அப்போது தி.மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர் ’நீரும் நெருப்பும்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஷூட்டிங்.
யூனிட்டில் ஒரு டெக்னீஷியன் வேலை விஷயமாக எதற்கோ கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு…
அந்த ஆள் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து எழுந்து, மீண்டும் விழுந்து அழுது தன் நிலை மிகவும் சிக்கலாகியிருப்பதாக சொல்லி அழுதிருக்கிறார்.

சிலர் அழும்போது பார்த்தால் சற்று விசித்திர நடவடிக்கைகளுடன் இருப்பார்கள். இயல்பாக சில கெட்ட வார்த்தைகள் கூட வாயிலிருந்து விழும். அழுகை, கோபம் கலந்து சற்று சத்தமாக உரக்க பேசுவார்கள்.
அப்படித்தான் அந்த ஆள் புலம்பியிருக்கிறார்.
ஆனால் வதந்தி ஒன்று எப்படியோ எம்.ஜி.ஆரை அடித்து விட்டான் என்பதாக பரவி விட்டது. 

ஸ்டுடியோ காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து ரசிகப் பட்டாளம் உள்ளே நுழைந்து….. ஒரு ஆயிரம் பேர் என்ற அளவில்… எழவு வீடு போல எல்லோரும் அழுது பதறிக்கொண்டு…
”அண்ணே! அண்ணே!”
”யார் அவன்? அவனக்கொல்லாமல் விட மாட்டோம்…”


ஷூட்டிங்கிலிருந்த எம்.ஜி.ஆருக்கு கோபம். செட்டை விட்டு வெளியே வந்து “….ங்கோத்தா, யார்ரா சொன்னா? என்னை எவன்டா அடிக்க முடியும்… ஏன்டா இப்படி ஸ்டுடியோவுக்குள்ள ஏறிக்குதிச்சி கலாட்டா பண்றீங்க? ….ங்கோத்தா…அஞ்சி நிமிஷம் உங்களுக்கு டைம்.. மரியாதயா எல்லாரும் ஓடிடுங்க.. எவனும் இங்க இருக்கக்கூடாது…ஒருத்தன் கூட இங்க இருக்கக்கூடாது.”
When Caesar says ‘Do it’, it is performed!

மிரண்டு, பணிந்து, பம்மி மூன்று நிமிடங்களுக்குள் ரசிகப்பட்டாளம் சிட்டாகப் பறந்து அங்கிருந்து மறைந்து விட்டார்கள். ஒரு ஈ, காக்கா இல்லை…ஸ்டுடியோ அமைதியாகி விட்டது.
……………………………………………

எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த நேரம். சென்னையில் ராதாகிருஷ்ண நகர் நீங்கலாக மீதி பதின்மூன்று தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தது. சென்னை தி.மு.க கோட்டையாக கருதப்பட்ட சமயம்.
வெற்றிகொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும் கட்சித்தலைமையின் ஆசியுடன் தி.மு.க மேடைகளில் தமிழகமெங்கும் மிக,மிக கடுமையாக எம்.ஜி.ஆரை வறுத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
சென்னை மவுண்ட் ரோட்டில் ஏதோ ஒரு கட்டிடத்திற்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். மாடியில் ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார். கீழே எதிர்க்கட்சி தி.மு.க காரர்கள் ஒரு கும்பலாகக் கூடி விட்டார்கள். அந்த நேர தி.மு.க காரனின் வழக்கமான அர்ச்சனை. ஒரே கூப்பாடு. “டேய் குல்லாக்காரப்பயலே..மலையாளத்தான்..கிழட்டுப்பயலே… மலட்டுப்பயலே..”
மாடியில் இருக்கும் எம்.ஜி.ஆருக்கு தெளிவாக இந்த வசவுகள் கேட்கின்றன.
கூட இருந்தவர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடம்.
எம்.ஜி.ஆர் கோபத்தின் உச்சத்திற்குப் போக அதிக நேரமாகவில்லை.
ஆவேசமாகி ‘ங்கோத்தா, என்ன நினைச்சிக்கிட்டுருக்கானுங்க..ங்கோத்தா..’ என்று எழுந்து விட்டார்.
சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த சிரமப்பட வேண்டியிருந்தது. “உட்காருங்க….சூரியனப் பாத்து நாய்ங்க கொரைக்கிதுக….”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.