Share

Jun 27, 2016

வலையில் இன்று உதிர்ந்த நினைவுகள்


ஒன்பது வருட திலீப்குமாருடனான (living legend) affair ஐ ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.
Madhubala - The beauty with tragedy and The Venus of Indian Cinema!

அசோக் குமாரின் தம்பி கிஷோருக்கு இது இரண்டாவது திருமணம். 1969ல் முற்றிய இதய நோய், நுரையீரல் பிரச்னைகள்  காரணமாக மதுபாலாவின் அகால மரணம் நடந்த அதே வருடம் Pyar ka mousam, Aradhana, அடுத்த வருடம் Sharmilee ஆகிய படங்களில் கிஷோர் குமார் பின்னணி பாடகராக மாபெரும் சாதனை செய்தார். அதன் பிறகு he neverlooked back.

கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலி தான் பின்னர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியானார்.
கிஷோரின் நான்காவது மனைவி லீனா சந்தாவர்க்கருக்கு அது இரண்டாவது திருமணம்.

ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே.
ஆர்.டி பர்மன் இந்தி இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன்
பெற்ற பிள்ளை.
ஆர்.டி.பர்மன் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஆஷா போன்ஸ்லே இந்த பையன் பர்மன் படிப்பில் அக்கறையில்லாமல் இருப்பது குறித்து கண்டித்திருக்கிறார். பத்தாவது படித்துக்கொண்டிருந்த பர்மன் தன் மனைவியை அப்போது தான் முதன் முதலாக சந்தித்திருக்கிறார். அந்த நேரத்திலே ஆஷா இரண்டு குழந்தைகளுக்குத் தாய்!

இவர் தான் தன் வாழ்க்கைத்துணைவி என்பது அப்போது பர்மனுக்குத்தெரிந்திருக்கவில்லை. பத்தொன்பது வயதில் ஆர்.டி.பர்மன் இந்தி சினிமாவுலகில் ’Raaz’ படத்தின் இசையமைப்பாளராகி விட்டார்! படிப்பில் எல்லாம் கவனம் சென்றிருக்கவில்லை என்று தெரிகிறது. பின்னால் காலம் ஆஷாவையும் ஆர்.டி. பர்மனையும் தம்பதிகளாக இணைத்து விட்டது! இன்று இருபது வருடங்களாக ஆஷா விதவை.
இந்த ஆஷா போன்ஸ்லேயுடன் தான் தன் கடைசி பாடலை கிஷோர் குமார் சாவதற்கு முந்தைய தினம் (12-10-1987) பாடினார். மறு நாள் செத்துப்போனார். மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ரீதேவி இருவருக்காக ‘Waqt ki Aawaz’ல் ’Guru O Guru…Guru Guru aajao’ என்ற பாடல் அது.

ஒரு விஷயம். இந்த மிதுன் சக்ரவர்த்தி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலியை தன் மனைவியாக்கி குழந்தைகள் பெற்றுக்கொண்டவர். ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் என்று அவர் மீது பலத்த வதந்தி இணைந்து நடித்த போது இருந்ததுண்டு.

கிஷோர் ஒரு multi faceted personality. நடிகர், பாடகர், பின்னணி பாடகர் என்று அவருடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. முகமது ரஃபி முழுக்க,முழுக்க ஒரு பின்னணி பாடகர்.

முகமது ரஃபியின் கடைசி பாடல் எது என்பதில் இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. தர்மேந்திரா நடித்த Aaa Paas. இதில் இரட்டையர் லட்சுமிகாந்த் – பியாரிலால் இசையமைத்த ‘Tu kahim aas paas hai dost’ பாடலா? அல்லது ’Shehar mein charcha hai’ பாட்டா? அன்று இரவே மறைந்து விட்டார் ரஃபி.


முகேஷ் கடைசியாக சத்யம் சிவம் சுந்தரம் படத்திற்காக “Chanchal Sheetal Nirmal Komal” பாடி விட்டு வெளி நாடு போனவர் கொஞ்ச நாட்களில் பிணமாக பெட்டியில் வந்தார்.

………………………

நான் வீட்டில் இருக்கும் போது டி.வியில் ஏதாவது சானலில் கர்னாடக சங்கீத கச்சேரி என்றால் நான் கவனிக்கு முன் அவசரமாக என் மகன்கள் கீர்த்தி, அஷ்வத் இருவரும் எப்போதும் வேறு சானல் மாற்றி விடுவார்கள் ”டேய் டேய் சானலை மாத்தாதீங்கடா” என நான் சொல்லும்போது பதில் “ போப்பா! “
அப்படி இதோ டி.வியில் என் இளைய மகன் அஷ்வத் பதற்றத்துடன் அவசரமாக சானலை மாற்றும்போது என் காதில் தேனாக தெளித்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடல் வரிகள்
”நிறைந்த மயிலொன்று தாளங்கள் பாட
கன்றொன்று வாலினால் சாமரம் போட”
உருகி பாடும் அருணா சாய்ராம்!

……………………………………………………………..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.