Share

Apr 29, 2016

Carnal Thoughts - 41



ந.முத்துசாமியின் ”படுகளம் ”

மகாபாரதத்தில் 18ம் நாள் யுத்தமான படுகளம்.
மு. நடேஷ் தான் இயக்குனர்.

69 வயதில் படுகளம் நாடகத்தை எழுதினார். அடுத்த மே மாதம் 25ம் தேதி ந.முத்துசாமிக்கு 80 வயது நிறைவடைகிறது.


பாரதிபாஞ்சாலி சபதம், ஞானக்கூத்தன் கவிதையெல்லாம் படுகளத்தில் பார்க்கலாம்.

தொன்ம பாத்திரங்கள் திடீரென்று ஒரு quantum jumpல் புஞ்சை மனிதர்களாக மாறும் அதிசயம்!
’நீ தான் டா பொழிய மாத்தப்பாக்கறே..’
’ நா மாத்தப்பாக்கலே... நீ தான் மாத்தப்ப்பாக்கறே’
’அண்ண பொண்டாட்டி கிட்ட படுப்ப.. நாளைக்கு தம்பி பொண்டாட்டி கிட்ட..’
‘பொண்டாட்டி பேச்ச எடுக்காதே..’
“ விரோதிங்கள வேஷங்கட்ட வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க”

சாலைக்குளம், கிடாரங்கொண்டான் அக்ரஹாரம் என்று துரியோதனனின், பீமனின் சஞ்சாரம். இதிகாசம் நாடகத்தில் deconstruct செய்யப்படுகிறது.


அரவான்: அன்னி ராவே சாந்தி முகூர்த்தம். மோகினி ரூபத்தில கிருஷ்ண பரமாத்மா வந்தாரு. முந்தானயெப் பிடிச்சேன்... என்ன இது.. என்ன விட மூத்த மாமாவே நான் பெண்டாள்வதா?... நான் மூர்ச்செயாயிட்டேன்..”


’கிருஷ்ணா ஏன் அழறே’

‘ இன்னக்கி சதுர்தசி.. சதுர்தசிக்கெல்லாம் அழறேன்.மோகினி வடிவம் எடுத்து அரவான் கிட்ட போன சதுர்தசி இன்னக்கி...அரவான் என்ன நேருக்கு நேரா அம்மணமா பாத்து மூச்சயடைந்து கீழ விழுந்தானே.. அன்னிலேந்து அழறேன். சதுர்தசிக்கு சதுர்தசி அழுதுக்கிட்டெயிருக்கேன்.’


படுகளம் ஓவியம் : மு. நடேஷ்

...........................................


http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-35.html

http://rprajanayahem.blogspot.in/…/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/02/blog-post_26.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.