Share

Jan 26, 2016

துர்வாச முனி சி.சு.செல்லப்பா






சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும்.


சி.சு.செல்லப்பா தான் தனக்கு ரிஷிமூலம், ’எழுத்து’ பத்திரிக்கை தான் தன் நதிமூலம் என்றே அன்றும் இன்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர் ந.முத்துசாமி. ’எழுத்து’ பள்ளிக்கே ’கூத்துப்பட்டறை’  நாடக செயல்பாடுகளை பெருமிதத்துடன் சமர்ப்பிப்பவர். செல்லப்பாவின் கோபம் இவரையும் தீண்டியிருக்கிறது.


 இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவொன்றில் கலந்து கொண்ட அன்றைய அமெரிக்க கான்சல் ஜெனரல் ஃப்ராங்க்ளின் தமிழ் மொழியில் சிறுகதை பற்றிய அபிப்ராயமாக ‘ முத்து சாமி ஸ்கூல்’ என்று சொல்லியிருக்கிறார். ‘INDIVIDUAL CHOICE’ என்பது எவருக்குமே உள்ள உரிமை. முத்துசாமியை தூக்கிப்பிடித்து ஃப்ராங்க்ளின் தன் அழுத்தமான கருத்தை அன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.



இதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து செல்லப்பாவை சந்திக்க அவருடைய வீட்டிற்குச்சென்ற முத்துசாமி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. தான் படிக்கக்கொடுத்திருந்த சில நல்ல புத்தகங்கள் தன் மீது செல்லப்பாவால் ஆக்ரோஷமாக, ஆவேசமாக தூக்கி எறியப்பட்டதைப்பார்த்து அதிர்ந்து போய் விட்டார். 


சிட்டி மகன் விஸ்வேஸ்வரம் என்னிடம் சொன்ன ஒரு விஷயம். சிட்டியை சந்திக்க செல்லப்பா வந்தால் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை வந்து விடும். ’போடா அறிவு கெட்டவனே, உனக்கு ஒன்னும் தெரியாது’ என்று செல்லப்பா கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்!


’அலசல் விமர்சனம்’ செய்து கொண்டிருந்த செல்லப்பா நீதிபதியாக இருந்திருந்தால் க.நா.சுவுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருந்திருப்பார். க.நா.சுவின் ’ரசனை விமர்சனம்’ மீது அவ்வளவு கோபம் அவருக்கு.

சுந்தர ராமசாமியின் நினைவோடை.
க.நா.சு, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், ஜி.நாகராஜன் போன்ற மகத்தான படைப்பாளிகள் பற்றியெல்லாம் சுந்தர ராமசாமி காலத்தின் பனிக்கட்டியால் மூடப்பட்ட தன் நினைவடுக்குகளிலிருந்து எடுத்துப்போட்ட ஞாபக அனுபவங்கள்.
 சுந்தர ராமசாமியின் ’சி.சு.செல்லப்பா நினைவோடை’  படிக்கும்போது அவர் சு.ரா.வின் படைப்புகளை நிராகரித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட செல்லப்பாவிடம் சுந்தர ராமசாமி எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்திருக்கிறார்! தன்னுடைய முன்னோர்களில் ஒருவராக எப்போதும் சி.சு.செல்லப்பாவை கனப்படுத்தியவர்.



சுந்தர ராமசாமி சொல்கிறார்:
’எழுத்து’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயாபைசா கூடக் கிடையாது. அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். ஏதோ கொஞ்சம் நகைகள் தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார் என்று. அவர் வெளியே கொண்டு போன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் சரித்திரமே கிடையாது.
 ‘ சார் இப்படிச் செய்யனுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிக்கை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, 'அடகு தானே வச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டு விடலாமே’ என்பார். ’அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். அதுக்கு அவர் ‘இந்த ’எழுத்து’ தொடர்ந்து நடந்தாக வேண்டும். நீ இப்போ ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். அந்த நகைகளை மீட்டு அவளிடம் தந்து விடுகிறேன்.’ என்றார். ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்;அடுத்தவரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் இருந்தது.
பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்து விட்டார். ’விளக்கு’ பரிசை அவர் மறுத்து விடுவாரோ என்று பயந்தார்கள். அவர் பரிசுப்பணமாக ஏற்க மறுத்து 'என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள்' என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள். ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.’


எம்.ஜி.ஆர் மீது அவர் தி.மு.கவில் இருந்த காலத்திலேயே  சி.சு.செல்லப்பாவுக்கு மிகுந்த அபிமானம். சுந்தர ராமசாமிக்கு இந்த அபிமானத்திற்கு காரணம் எம்.ஜி.ஆர் இருந்த கட்சி எதுவாக இருந்த போதிலும் அவர் மனதில் இருந்ததெல்லாம் காந்தி, நேரு, காமராஜர் இவர்கள் தான். அதே காரணத்தால் தான் செல்லப்பாவுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

வாக்கு வாதம் முற்றி செல்லப்பா பிடிவாதமாக “ எம்.ஜி.ஆரைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் பெரியவன். க.நா.சு வை விடப் பெரியவன்” என்று சொல்லியிருக்கிறார். 

எம்.ஜி.ஆருக்கும் க.நா.சுவுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவர்களை ஒப்பிடணும்? எம்.ஜி.ஆரை ஆதரிப்பதன் மூலம் க.நா.சுவின் பலத்தைக் குறைத்து விடமுடியுமா என்ன?

செல்லப்பா உடை பற்றி “ அவர் வேஷ்டியைச் சலவை செய்து கொள்ளாமல் துவைத்து துவைத்துப் பழுப்பேறிப் போயிருக்கும்”
அழகிரிசாமி நினைவோடையில் சுரா ’நான் சொன்ன மாதிரியே தான் செல்லப்பாவின் உடை பற்றி அழகிரிசாமியும் சொல்லியிருக்கிறார்.  ”செல்லப்பா சட்டையையும் வேஷ்டியையும் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது சலவை செய்யக்கூடாதா? “ என்று வருத்தப்பட்டிருக்கிறார்’ என்கிறார் சுந்தர ராமசாமி.
அந்த அளவுக்கு உடை விஷயத்தில் எளிமையாக இருந்தவர் சி.சு.செல்லப்பா எனத் தெரிய வருகிறது.

1960களில் இப்படி இருந்த வத்லகுண்டு சி.சு.செல்லப்பா 1935 கால கட்டத்தில் எப்படியிருந்திருக்கிறார்!
குண்டூசி கோபால் ’ஜெயபாரதி’ பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த விஷயம்.
’பி.எஸ்.ஆர்.கோபாலின் குண்டூசி’ நூலில் வாமனன் குறிப்பிடுகிறார்:
‘ஒரு நாள் தஞ்சாவூர் மைனர் போல் கட்டுக்குடுமி, பட்டுச்சொக்காய், கைவிரல்களில் மோதிரங்கள், கைக்கடிகாரம், கழுத்தில் தங்கச்சங்கிலி, ஜரிகை அங்கவஸ்திரம், மயில்கண் ஜரிகை வேஷ்டி- இந்த அலங்காரங்களுடன் ஒருவர் புதிதாக உதவி ஆசிரியர் வேலைக்கு வந்து சேர்ந்தார். கோபாலின் எதிரே வந்து அமர்ந்தார். உங்கள் பெயரென்ன என்று விசாரித்தார் கோபால். ’சி.சு.செல்லப்பா’ என்று பதில் வந்தது. பின்னாள் ‘எழுத்து’ ஆசிரியரின் அந்நாள் மெருகுடன் கூடிய புது மாப்பிள்ளை வேடம் அது!’ 


…………………………………………………………………







ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபி டிக். 

 Moby-Dick; or, The Whale அமெரிக்க நாவல். மோபி டிக் என்ற திமிங்கலம். 
இந்த நாவலின் முதல் வரி ‘‘Call me Ishmael” -The most recognizable opening line in American literature. கதை சொல்லி இஸ்மாயில்.

சி.சு. செல்லப்பாவின் நாவல் ’வாடி வாசல்’ முற்றிலும் வேறான களம்.
 ஜல்லிக்கட்டு பற்றிய குறு நாவல். இந்த நாவலில் வரும் காரி என்ற வாடிப்பட்டி ஜல்லிக்கட்டுக் காளை.
மோபி டிக் படிப்பவன் பெறும் அனுபவம். கடல். அதில் கப்பல். கேப்டன் அஹாப்.
A ship at sea! In the prose writings of Thoreau, a ship at sea is sometimes a metaphor for the soul.
அந்தத் திமிங்கலம் தன்னுள்ளே இருப்பதாக மோபி டிக் படிக்கும் ஒருவன் உணர்ந்தான் என்றால் அவன் வக்கிரமானவன். 

வில்லத்தனத்தின் மொத்த உருவம் மோபி டிக்.
ஒரு வகையில் மோபி டிக் மட்டுமல்ல அஹாப் கூட கொடூரமானவன்.
 
Captain Ahab and his obsession with a huge whale, Moby Dick.
அந்தத் திமிங்கலத்திடம் காலைப் பறிகொடுத்து விட்டு அதே திமிங்கலத்தைக் கண்டுபிடித்து கொல்லும் முயற்சியில் உயிரை விடும் கேப்டன் அஹாப்.
மோபி டிக் திரைப்படமாக க்ரெகரி பெக் நடித்து 1956ல் வெளி வந்தது. ஜான் ஹஸ்டன் இயக்கியிருந்தார். இந்த ஜான் ஹஸ்டனை நோவா க்ராஸ் என்ற வக்கிர வில்லனாக ரோமன் போலன்ஸ்கியின் சைனா டவுன் (1974) படத்தில் பார்க்கலாம்!

சி.சு.செல்லப்பாவின் ’வாடி வாசல்’  காலச்சுவடு நவீனத் தமிழ் “க்ளாசிக்” நாவல் வெளியீடு.
“Classic'’ - a book which people praise and don't read. – Mark Twain

ஜல்லிக்கட்டு வீரன் கிழக்கத்தியான் பிச்சி. தன் தந்தை அம்புலியைக் கொன்ற காரி என்ற ஜல்லிக்காட்டு காளையை வெற்றி கொள்கிறான்.
மோபி டிக் 1851ல் ஹெர்மன் மெல்வில் எழுதி வெளி வந்த நாவல்.
 வெவ்வேறு தளங்களில் விரியும் முற்றிலும் மாறுபட்ட மகத்தான நாவல்.
வாடி வாசல் சி.சு.செல்லப்பா எழுதி 1959ல் வந்த குறு நாவல்.
மோபி டிக் 882 பக்கங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நாவல். 
வாடி வாசல் 56 பக்கங்கள் கொண்ட சிறு குறுநாவல்.

வாடி வாசல் வாசிக்கும்போது மோபி டிக் ஏன் நினைவுக்கு வர வேண்டும்?
வாசிப்பு என்பது ஒரு விசித்திர அனுபவம்!  
Reading is a multifaceted process !

மோபி டிக் என்ற திமிங்கலம்! காரி எனப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை!

அஹாப்பையும் திமிங்கலத்தையும் எத்தனை வருடங்கள் ஆன போதிலும் எப்படி மறக்கவே முடியாதோ அது போலத்தான் காரி என்ற காளையும் பிச்சி என்ற மானிடனும்.
Reading is a superpower!



.......................................



Jan 16, 2016

Amoura's SMS love and romance

Amoura's Brief Encounter!





I feel very sad as I lost the chance to sit closely locking our hands.

If I come close to you, it will hurt you in many ways. You think that I am tantalizing you. That is why I try to be away. Dear… I hurt you always.
I never abondon you dear
We will definitely hug
I wish that be in your chest for sometime
Please don’t break me that time.. I’m so soft

02.01.2014
I swear I’m not a fraud
Believe me I have genuine love
I don’t know how to tell this.
Believe me, you never believe me I think
Superb moments you presented me
While singing wonderful


03.01.2014
Don’t know when..
I know I’ll hug
This is the most rarest decision for me
10.01.2014
Yesterday when you received my two messages,
You asked me many times what I want to tell you
I wish to tell you one thing
We dare not harm any one in both family
Then there should be a calm affair between us
Instead of carnal desire


I can be quiet..
Don’t feel anything if my eyes follow you
You are totally disturbed by me
Mentally and physically you are disturbed my Dear
That pains me a lot
I’m unable to fulfil your wish my dear..
That is why I tell you
I never my dear I can’t do like that
Whatever you say, I don’t do
Hug and Kiss..That I agree
But how? When and Where?
Even without your consent
I will do that
No..I will run towards you
And keep myself very close to your chest
I will keep my face with closed eyes
Fuck?? That’s why I dare not take steps to hug


Becoming bold is better than
Becoming pretty and nervous
You will just become emotional
And try to quench this desire
But when problem comes
We cannot face it
But you are more fearful than me
More nervous and emotional
I gained courage
As I thought and observed myself
During each step
Of the development of our relation
You just felt my presence
And became emotional
You are far away from reality
I understand your capacity of mind
When facing the problem
You are the best man but not bold


I’m not fine
No dear…but I don’t say
You will be more emotional
I’m not sick… mind kills me
Enakku pakkanumda kanna..
Ayyo venda
How, when and where..?
Venda.. dear It will create more problems
Which we can never solve
I’m afraid da kanna
I don’t know how to maintain the secrets
Of this matter
I’m unable to be like that


15.01.2014

Good Morning Dear!
You can send SMS
But don’t dial my number
Someone in my family may attend the call
In my absence
But they don’t check my mobile messages


Feel very sleepy
The dream of last night was dangerous
I didn’t sleep well
I cut my vein after our tryst
It was the nightmare
In the dream
You didn’t hear me and fucked


This is not love..Just lust
I always fear that…Vendaa..
I will not tell anything
I can tell you only what is in my mind
But you blame me always
I keep quiet
You focus on one thing
That is not love..only hunger
I’m a prey


24.01.2014

Will you have enough patience
To make me sleep in your chest?
Will you request your heart to beat
Without sound as your beloved
Is sleeping in your chest
Kannaa ..Sing a song
Till I reach the threshold of sleep


That dream…
I found us in a bed room
You invited me towards your chest
I felt shyness and
I stood where I had been in the same room
You walked towards me
Touched my shoulder
I immediately fell upon your chest
You kissed my lips and cheeks
When your hands moved through me
I tried to hold your hand
But I was weaker and you become stronger
You lifted me and then I begin to protest
You said ‘nothing darling nothing, be cool’
I kept on weeping
You kept me in bed


My eyes and brain are tired
But they sympathize with my paining heart
As it is craving and searching
Her sweet man everywhere
Like the winds of the sea shore
My heart is tired but
She sympathizes with my eyes and brain
As they share her
Sleepless and restless length of time
In pursuit of her First man
You are my First Man

I saw you dear….
Like the wave of a holy river you moved

Dear.. you didn’t slip anything. You are always with me.
And whenever I can’t see you .. become restless..
What it means?
It is new to me  I don’t know how to deal me in this matter.
That’s the reason for fear.

Wish to hear you.. Can I call? When?

Lend atleast 5 minutes..


“Mayakkunna mayil peeli
Mizhiyinakkal
Manmadhante
Malarambin
Avanazhikal”
Meaning of this movie song follows
Your eyes which are like the peacock feathers ( they are mesmerising too)
Are the container of arrows owned by Kamadeva
Mizhiyinakal – pair of eyes
Aavanazhikal – the container to keep arrows of a warrior ( Kamadeva)


01.02.2014
Dear ! I can’t stand in front of you
I may hug you unknowingly
Your today’s shirt is excellent
This is my favourite colour
Can’t control my wish to hug
Don’t come near dear… Hug..
Hug so forcefully and deeply


Love you so deeply
I’m so romantic and lovable
When I’m in bed attending your phone
I’m becoming even erotic
That time I wish
So seriously to hug my dear
So..So..deeply
Want to be crushed by you my dear

Evide Ente Sneha Gayakan?
Where is my Singer of Love?

Though you don’t love me
I don’t stop loving
It is related to my heart
It will not depend on you
I found I love and didn’t come across this kind of love
But it happens in me
So I experience
I’m unable to explain you ‘what and how’
It’s it’s something rare






I think that I keep the pearl of
This love and the proper casket

Do you feel my love a disturbance
Sometimes I think that I disturb you
I should not have revealed my love
That’s why You suffer
Otherwise I would be someone for you


12.02.2014

See.. how school children react
When they see us together
This is due to the body language
Children are clever
You are like a child
I don’t feel anything
Except a fear when I’m near you
Anyone can read the MahaKavya of Love
From your eyes when I’m in front of you

They look at both of us dear..
You are lovelorn
They look at us and I’m fearful


13.02.2014
Dear..I love you
I can’t control my self even when I introduce my hubby to you
'This is my fifth sms to you
When you are talking with my husband'
Dear…dear..dear…dear…

14.02.2014
Your Amoura is shocked when you send an SMS
By mistake you have sent it to me meant for my worst enemy
Addressing her in your erotic style

The chariot of Yudhistra which was in sky
While he was in war front
Came down and touched the earth
As he proved to be dishonoured
(You may say ‘Nothing is unfair in love and war!’
and
 "Love means never having to say you are sorry.")

It’s the Irony that to day is The Valantine’s day!
‘A nice day for Love
A memorable day for Departure’


That’s God’s grace to acknowledge me
By mistake about your secret crush
With the worst one I have ever seen
I Thank God

That mistaken message tells something about you
Which can’t be tolerated by a lover
That’s all
I don’t interfere in your wish
As I have the best option to quit
Thank you for all and everything


We may never love like this again
This little FLIRTATION is over..
A silly and undignified flirting with a complete stranger?
A chance meeting between two happily married strangers!
A brief encounter! No more happiness..  prepare for tears..

Ok.. we will stop talking about this
Let me be just a person who knows you
That’s enough
For this relief, much thanks



...........



"If everything is imperfect in this world, Love is perfect in it's imperfection."

- IngmarBergmen  in 'Seventh Seal' movie 


......................................................



Kerry Washington's photos


http://rprajanayahem.blogspot.in/2015/02/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2014/03/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_2256.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_22.html





Jan 14, 2016

யானை, ஒட்டகம், பல்லக்கு




காஞ்சி பரமாச்சாரியாள் புஞ்சை கிராமம் மேலக்காவிரியில் பயணமாக வந்திருக்கிறார். பரமாச்சாரியாள் வருவது என்றால் பல்லக்கில் தான் வருவாராம். யானை, ஒட்டகமெல்லாம் வரும். அப்படி யானை ஒட்டகத்துடன் தான் அன்று வந்திருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்க்க ஓடியிருக்கிறார்கள்.



கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கு அப்போது பத்து வயது. புஞ்சை அக்ரஹாரத்தில் தந்திரமாக குழந்தையை வீட்டில் ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு பரமாச்சாரியாளைப் பார்க்க மேலக்காவிரிக்குப் போய் விட்டார்கள்.
குழந்தைக்கு ஏக்கம். ரொம்பத் தவித்திருக்கிறது. யானையையும் ஒட்டகத்தையும் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கமும் தவிப்பும்!
இப்போதும் அந்த வருத்தம் இருக்கிறது.

இதை முத்துசாமி சார் சொன்ன போது எனக்கு சுந்தர ராமசாமியின் கதை ஒன்று ஞாபகம் வந்தது. காலச்சுவடில் அதை சு.ரா எழுதியிருந்தார். தலைப்பு
 ” நண்பர் ஜி.எம்”

மதுரை காலேஜ் ஹவுஸ் லாட்ஜில் இரண்டு குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து விட்டு பெற்றோர் வெளியே போயிருப்பார்கள். டவுன் ஹால் ரோட்டில் யானை வருகிறது. காலேஜ் ஹவுஸில் இருப்பவர்கள் கூட யானையைப் பார்க்கச்செல்கிறார்கள். குழந்தைகள் யானையைப்பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு அழுகின்றனர். காலேஜ் ஹவுஸில் தங்கியிருக்கும் கதை சொல்லியை பார்க்க வரும் ’ஒருவர்’ அந்த அறையின் கதவை உடைத்து குழந்தைகளை விடுதலை செய்து யானையைப் பார்க்க அனுப்புகிறார்.


சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் “ கதவை உடைத்து குழந்தைகளை யானையைப்பார்க்க அனுப்புபவர் ஜி. நாகராஜன் தானே?”
நான் சொன்னது சரி தான் என்றார் சு.ரா.

அசோகமித்திரனின் “விரல்” கதையில் கதவிடுக்கில் சிக்கிய விரல்   நசுங்கிப் போகிற குடிகாரர் கூட
ஜி. நாகராஜன்.

திலீப் குமாரின் “ ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் “ கதையில் வருகிற அழுக்குச் சட்டைக்காரர் ஜி. நாகராஜன்.



விக்கிரமாதித்யன் கவிதை - ”தீவிரமான தேடலில்
அந்நியமாகிப்போகிற வாழ்வுக்கு முன்னுதாரணமாக காலத்துக்கு முந்தியே பிறந்து காலத்துக்கு முந்தியே செத்துப்போவான் சிரஞ்சீவி கலைஞன் ஜி. நாகராஜன்!”




அந்தக்காலத்தில் பழைய தஞ்சாவூர் ஜில்லாவில் காஞ்சி பரமாச்சாரியாள் பல்லக்கில் எப்போதும் போல போய்க்கொண்டிருந்தாராம். பல்லக்கை சுமக்க மனிதர்கள். தி.க.காரர்கள் பல்லக்கைப் பிடுங்கி வைத்துக்கொண்டார்களாம். முத்துசாமி சொன்னார்.
அதன் பிறகு தான் பரமாச்சாரியாள் பல்லக்கைத் தவிர்த்து விட்டாராம்.


ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன்  மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.
பாரதி தாசன் புதுவையில் உள்ள தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் மகளை முத்துசாமிக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
முத்துசாமி சின்னவயதில் இருந்தே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப்பெண்ணை நான் பார்க்கவேண்டுமே என்று பாரதி தாசன் சொன்னாராம். பாரதி தாசன் தங்கியிருந்த வீட்டின் அருகே தான் அந்தப்பெண்ணின் வீடு. முத்துசாமி அந்தப்பெண்ணை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். கறுப்பு சேலையில் சிவப்பு பார்டர் போட்ட சேலையில் வந்தார் அந்தப்பெண்!
அந்தப்பெண் தான் குஞ்சலி என்ற அவயாம்பாள் மாமி! முத்துசாமி சாரின் மனைவி. சென்னையில் அரசு உத்தியோகத்தில் இருக்கும்போது குஞ்சலி மாமி அந்தக்காலத்தில் ’திராவிட நாடு’ பத்திரிக்கையின் தீவிர வாசகர்!
ந.முத்துசாமி தி.மு.க உறுப்பினராய் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். புஞ்சையில் கட்சி வளர்ந்ததில் அன்று இவரது பங்கும் இருந்தது.
.........................................



http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2014/09/blog-post.html


......................................

Jan 13, 2016

1980களில் கவர்ச்சி நடிகைகள்





அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி. சொந்த வாழ்க்கை புத்திர சோக அதிர்ச்சி. ஆட்சியை மீட்டெடுத்தும் நிலைகுழைய வைத்த துயரம். பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பியதால் ஏற்பட்ட கடும் நெருக்கடி, காலிஸ்தான் சிக்கல், எதிர்கட்சிகளின் பாராளுமன்ற ஆர்ப்பாட்ட அரசியல் தீர்மானங்கள், பாகிஸ்தானால் காஷ்மீர் குழப்பங்கள், உள் நாட்டு பிரச்னைகள்…. அடுத்த சில மாதங்களில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்படவுள்ளார்.
இந்திராகாந்தி தான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கையொன்றிலிருந்து தலையை நிமிர்த்தி குறுநகையுடன் கேட்கிறார். “Who is this ‘Silk’!?”


1980களின் Item dancer தான் சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஏலூரு சொந்த ஊர். அவருடைய பிரபலத்தின் தாக்கத்திற்கு இதை விட வேறு எதைச்சொல்லமுடியும்?

கமல் ஹாசன் தந்தை சீனிவாசனுக்கு சில்க் ஸ்மிதா மீது ஒரு OBSESSION!
“ என் அப்பாவுக்கு பிடித்த நடிகை சில்க் தான். சில்க் ஷுட்டிங் இருந்தால் ஸ்டுடியோவுக்கு வர ஆசைப்படுகிறார்!” என்று உற்சாகமாக பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சில்க் ஸ்மிதாவுடன் சீனிவாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட பத்திரிக்கையில் பிரசுரமானது.

சில்க் மீதான ’ரசிக ரசனை’ பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு கவர்ச்சி நடிகைக்கு இப்படி ஒரு FANATICISM இருந்ததேயில்லை என்று தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்தியாவே குறியீடாக மூக்கில் விரல் வைத்தது.


1960களில் சாமுத்ரிகா லட்சண அம்சங்கள் அத்தனையும் பொருந்திய கவர்ச்சிக்கன்னி ஜோதிலட்சுமிக்கே கூட இப்படி இருந்ததில்லை. விஜயலலிதாவுக்கு,ஜெய்குமாரிக்கு இப்படியில்லை.

1970களில் ஜெயமாலினி இந்த சில்க் பவுசில் ஒரு சிறு அளவு கூட காண வாய்க்கவில்லை.

வண்டிச்சக்கரம் “ வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை!ஊத்திக்கிட்டே கேளேன்டா என்னோட பாட்டை!” பாடலில் சில்க் ஸ்மிதாவைப்பார்த்தவுடனேயே ரசிக பெருமக்களுக்கு வியர்த்துப்போய் விட்டது.

”நேத்து ராத்திரி அம்மா..தூக்கம் போச்சுடி அம்மா….” கமலோடு சகலகலாவல்லவனில் ”பொன்மேனி உருகுதே” மூன்றாம்பிறையில்.


வாலிப ரசிகப்பட்டாளம் “ தங்கத்தகட்டழகி, தாமரை முகத்தழகி, சிரிக்கும் சிங்காரி, கட்டான உடை உடுத்தி சிட்டாகப் பறந்து வரும் தென்ன மரத்து சிட்டு, தேன் போன்ற லட்டு, தட்டு,லொட்டு, எங்கள் வீட்டு எவர்சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் படைத்த சில்க்கம்மா! கற்கண்டு போன்ற சொற்கொண்டு வீசி பொற்கொண்டு, உள்ளத்தில் இருப்பவளே! என்னவளே! பொன்னவளே! உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகுதடி! சில்க்கம்மா! என் கண்ணம்மா!” என்றெல்லாம் என்னமா கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா!





ரஜினி “ பேசக்கூடாது! வெறும் பேச்சில் சுகம் ஏதுமில்லை!லீலைகள் காண்போம்!” அடுத்த வாரிசு.

தங்க மகனில் ரஜினி சில்க்கிடம் “அடுக்கு மல்லி! இது ஆள் பிடிக்குது!”


”சில்க்,சில்க்,சில்க்” என்றே ஒரு திரைப்படம் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபிநாத்( நடிகை சுலக்சனாவின் முன்னாள் கணவர்) தயாரித்து வெளிவந்தது.
’அலைகள் ஓய்வதில்லை’யில் ஒரு கேரக்டர் ரோல் செய்தபோதும் ’கோழி கூவுது’, ’அவசர போலீஸ்’ படங்களில் ஒரு கதாநாயகியாக வந்தபோதும் அவரிடம் ஒரு EROTICISM இருந்தது என்பதே உண்மை.
அந்த கண்கள். வாயைக்கோணிக்கொண்டு அவர் சொல்லும் ”மாமா” கிளர்த்தியது.


தன்னுடைய இருபதுகளில் 1980களில் கலக்கிய சில்க் ஸ்மிதா முப்பத்தாறாம் வயதில் தற்கொலை செய்து கொண்ட போது எல்லோருக்கும் தவிர்க்கமுடியாமல் ஹாலிவுட்டின் மர்லின் மன்றோ தான் நினைவில் நிழலாடினார்.

ஒரு லாரி டிரைவர். ஹைவேஸில் லாரி ஓட்டுபவர் அப்போது ஆந்திராவிலிருந்து வந்திருந்தார். சில்க் ஸ்மிதாவின் உடன் பிறந்த சகோதரர். அந்தஸ்தும் வசதியுமான வாழ்க்கையில் சில்க் தன் ரத்த சொந்தங்களை நெருங்க விடவில்லை என்பது விசித்திரம் தானா? எப்போதும் ஒரு தாடிக்காரர் அவரோடு நிழலாக இருந்தது கூட வினோதம் தானா?


13 வயதிலேயே மலையாளப்படத்தில் நடித்து விட்ட அனுராதா சிவப்பு மல்லியில் ஒரு கதாநாயகியாக தமிழில் தெரிய வந்தார். நடன இயக்குனர் கிருஷ்ணகுமாரின் மகள் தான் அனுராதா. அப்போது ஒரு காதல் உறவு. காதலனுடன் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தம் கூட ஏற்பட்டதுண்டு. முப்பது படங்களுக்கு மேல் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி அடைந்ததில்லை.

திசை மாறி திரையில் கவர்ச்சி கன்னியாக கண்ணெதிரே தோண்றினார். அனுராதாவுக்கு எப்போதும் தன் சாயல் பற்றி ஒரு பெருமை உண்டு. “நான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக பலரும் சொல்லியிருக்கிறார்கள்!”

குடும்ப பாங்கான நடிகை சாவித்திரி கூட விரசம் தெரிய “சுழி” என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

அனுராதாவின் கவர்ச்சி நடனத்தில் உடனே நினைவுக்கு வருவது ரஜினியின் தங்கமகனில் ’மச்சான பாரடி, மச்சமுள்ள ஆளடி!’.

’அலைகள் மிதக்குது, நிலவொன்று குளிக்குது’ என்று அனுராதா ஆட்டம் போட்டது மேஜர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில் கமல், ஊர்வசி நடித்த ’அந்த ஒரு நிமிடம்’.

அர்ஜுன் நடித்த ‘எங்கள் குரல்’. இதில் ’அடி வாடி மானே, மரிக்கொழுந்தே!’ என்று அனுராதாவுக்கு ஒரு கவர்ச்சி நடனப்பாடல்.

அனுராதா ஆடி ஓய்ந்த பின் உடல் ஆரோக்கியமில்லாத கணவருக்கு NURSING செய்து கொண்டு இருப்பதைப்பற்றிக்கூட டி.வி.பேட்டியொன்றில் அனுராதா சொன்னார். 2007ம் ஆண்டு இவருடைய கணவர் இறந்து விட்டார்.
அபினயாஸ்ரீ என்று ஒரு மகள். இவரும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
அப்புறம் டி.வி. சீரியலில் அனுராதா நடிகர் விஜயகுமாருக்கு வயதான தங்கையாக, ரம்யா கிருஷ்ணனுக்கு அத்தையாக…


டிஸ்கோ சாந்தி மிகவும் நிர்ப்பந்தமான சூழலில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மூத்த பெண் பிள்ளையாக நடிக்க வந்தவர். அப்பா சி.எல்.ஆனந்தன் சினிமாவில் மார்க்கெட் இழந்த நிலையில் ஊர் ஊராக நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த போது, அவரை புக் செய்ய வருகிற எக்ஸிபிஷன் காண்ட்ராக்டர்களிடம் ”டீ சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்கும் ஆனந்தன், அவர்களிடமே அதற்கு பணம் கேட்டு வாங்கி சிறுமி சாந்தியைக் கூப்பிட்டு டீக்கடைக்கு அனுப்புவார்.

ஆண்டுக்கணக்கில் சரியான திரை வாய்ப்புக்காகப் போராடி ஒரு வழியாக ’ராத்திரி நேரத்து பூஜையில், ரகசிய தரிசன ஆசையில்’ சூப்பர் ஹிட் பாடல் மூலம் கவர்ச்சி நடிகையாக வெளிச்சத்துக்கு வந்தார்.

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் தயாரித்த படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளிவந்த ‘ஊமை விழிகள்’ ஆபாவாணன் இயக்கம். இந்தப்படம் அப்போது கொஞ்ச காலமாக ஈ ஓட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தைக்கூட பிஸியாக்கியது.

’வெற்றி விழா’ பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல் ஹாசன் ஆக்ஷன் ஹீரோவாக தூள் கிளப்பிய படம். டிஸ்கோ சாந்திக்கு அதில் கலக்கலாக நடனமாட “ தத்தோம் தலாங்கு தத்தோம்! தொட்டும் தொடாமல் தொட்டோம்!” வாய்த்தது.

பிரபுவின் ’சின்னவர்’. இதில் டிஸ்கோ சாந்திக்கு ‘படகோட்டும் பட்டம்மா! பாட்டொன்று கட்டம்மா!’

தங்கை லலிதகுமாரிக்கு பிரகாஷ் ராஜுடன் காதல் திருமணம் தான் என்றாலும் நிறைய நகை போட்டு டிஸ்கோ சாந்தி கட்டிக் கொடுத்தார். அந்த திருமண பந்தத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் ரத்து பெற்று விலகிய போது லலிதகுமாரியை விடவும் டிஸ்கோ சாந்தி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். லலிதகுமாரியின் குடும்பத்தையும் இவரே தான் கவனிக்க வேண்டிய நிலை.
ஸ்ரீஹரி என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்த டிஸ்கோ சாந்தி இப்போது விதவை. இரண்டு வருடம் முன் ஸ்ரீஹரி மறைந்து விட்டார். இரண்டு மகன்கள்.



அமீர்ஜான் இயக்கிய முதல் படம் ’பூ விலங்கு’ மூலம் கதாநாயகியாக குயிலி அறிமுகமானார். முரளிக்கும் தமிழில் இது முதல் படம். மூன்றே ஆண்டுகளில் மணிரத்னத்தின் ’நாயகன்’ படத்தில் ’நிலா அது வானத்து மேலே, பலானது ஓடத்து மேலே’ என்று ‘பலான’ கவர்ச்சி நடிகையாக குயிலி!
சித்ரா லட்சுமணன் இயக்கிய ’சூர சம்ஹாரம்’.
குயிலி தான் ‘ வேதாளம் வந்திருச்சி’ பாடலில் கவர்ச்சி நடிகை.

இப்போது அம்மா நடிகையாக டி.வி.சீரியலில் பார்க்கமுடிந்தது. கொனஷ்டைகளை குறைத்து நடித்தால் நன்றாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் படங்களில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் பிரபலமாக இருந்தார். நாகர்கோவில்காரர். பெயர் ஜஸ்டின். ’ரகசிய போலீஸ் 115’ ல் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சி இவருடன் வித்தியாசமாயிருக்கும். குடியிருந்த கோயிலில் இவர் பேசும் சீரியஸ் வசனம் வேடிக்கையாக, கொஞ்சம் தமாஷாக இருக்கும். ‘நம்பாத பாபு, நம்பாத. இவன் ஒன் காதலி ஆஷாவோட ஆடுறான்,பாடுறான்’

இந்த ஜஸ்டின் மகள் பபிதாவும் 1980களில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் ஒரு ரௌண்டு வந்தார்.

’நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடல் காட்சியில் நடனமாடிய பபிதா, பின்னாளில் சிரிப்பு நடிகையாக பாக்யராஜின் ’பவுனு பவுனு தான்’ படத்தில் ஐஸ்ஃப்ரூட் ஐயராத்து மாமியாக தலை காட்டினார்.


நான் உதவி இயக்குனராக வேலை பார்த்த படத்தில்
 “ உனக்கொரு டேட், எனக்கொரு ரேட்! நீ அழைத்தால் நான் வருவேன்!” என்று கவிஞர் வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை க்ளப் டான்ஸ் ஆடினார். பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது. காட்சி படத்திலும் இடம்பெற்றது. அவர் யார்? பெயர் என்ன? என்று எவ்வளவு யோசித்துப்பார்த்தும் எனக்கு ஞாபகம் வரவில்லை! 1980களில் இப்படி உதிரியாக எத்தனை கவர்ச்சி நடிகைகள் மின்மினி பூச்சிகளாய் மின்னி மறைந்திருக்கிறார்கள்!



http://rprajanayahem.blogspot.in/2014_08_01_archive.html


..........


’தி இந்து பொங்கல் மலர் - 2016’ ல் பிரசுரமாகியுள்ளது.

http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_8.html