Share

Jul 31, 2014

Reel names and Real names


ராஜேஷ் கன்னாவின் இயற்பெயர் ஜட்டின் கன்னா. தர்மேந்திராவின் பெயர் தரம் சிங் டியோல். சஞ்சீவ் குமார் பெயர் ஹரிபாய் ஜரிவாலா.
அண்ணன் ராஜ் கபூர்  மட்டுமல்ல,  தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர் கூட ராஜ் கபூர் தான்.
 ஷம்மி கபூர் - ஷாம்ஷர் ராஜ் கபூர்
சசி கபூர் - பல்பீர் ராஜ் கபூர்
இவுங்க அப்பா ப்ருத்வி ராஜ் கபூர்.

அசோக் குமார் - குமுத் கங்குலி
 தம்பி கிஷோர் குமார்  பெயர் அபாஸ் குமார் கங்குலி.

அமிதாப் பச்சன் - அமித் ஸ்ரீவத்சவா?

ரஜினிகாந்த் - சிவாஜி ராவ் கெயிக்வாட்

கமல் ஹாசன் தான் இயற்பெயரோடு இருப்பவர். கமல் ஹாசன் மட்டும் வீட்டில் அப்பா சீனிவாசன் வைத்த பெயரோடு இருப்பவர். தன் பெயரில் ஒரு புள்ளி வைத்து, கமல ஹாசன் என்ற பெயரை கமல் ஹாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று அபத்தமாக கண்டு பிடித்துச் சொல்லக் கூட ஆட்கள் உண்டு. அது பெரிய கண்டுபிடிப்பு என்று பெருமைப்படுவது மிகப்பெரிய அபத்தம்.
 

 ஆனால் விதியை என்னவென்று சொல்ல?
Fun Facts  India என்ற நூல் பிரபலமான Rupa Publisher வெளியீடு. டெர்ரி ஒ' ப்ரையன் ஆசிரியர். 
இதில் கமல் ஹாசனின் இயற் பெயர் 'ஆள்வார் பேட்டை ஆண்டவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெர்ரி ஒ' ப்ரையன் கோஷம் 'Read, Record, Recall '. கமல் ஹாசன் இயற்பெயர் ஆள்வார் பேட்டை ஆண்டவர் என்று எவ்வளவு பேர் read பண்ணி record பண்ணி recall பண்ண வேண்டியிருக்கும்.

திராவிட இயக்கத்தலைவர்கள் பலரும் 1940களில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டவர்கள்.
ஆச்சரியமான விஷயம்.
மு. கருணாநிதி( தட்சிணாமூர்த்தி) ஏன் அழகன், செழியன்,மாறன் என்று மாற்றிக்கொள்ளவில்லை!. அவர் இயல்புக்கு இது ரொம்ப அதிசயம்!

.........................................................................



Jul 27, 2014

ஆராதனா, பாபி, யாதோன் கி பாராத், ஷோலே

ராஜேஷ் கன்னாவின் மும்பை 'ஆசிர்வாத்' பங்களா விற்கப்பட்டு விட்ட செய்தி நேற்று பத்திரிக்கையில் பார்க்கக்கிடைத்தது. 90 கோடியாமே!

1970களின் முன்பகுதியில் ஒரு நான்கு இந்திப்படங்கள்  தமிழ் நாட்டில் சும்மா சக்கை போடு போட்டன. எவ்வளவு நாட்கள் என்ற புள்ளி விபரம் தேவையில்லை.


'
 


ஆராதனா, பாபி,யாதோன் கி பாராத்,ஷோலே என்ற அந்தப் படங்கள் தமிழ் நாட்டில் 'பேயாட்டம்' என்ற அளவில் ஓடியது.

ராஜேஷ் கன்னா, தர்மேந்திராவுக்கு தமிழ் நாட்டில்  இருந்த Craze சொல்லி முடியாது.

ஷாருக் கானை வைத்து மணிரத்னம் எடுத்து உயிரே, உயிரே என்றாலும் ஓடாத நிலை.

'ஆராதனா'  திருச்சி கெயிட்டி என்ற  ரொம்ப சின்ன பாடாவதி தியேட்டரில 'சும்மா லைக் பிச்சிக்கிட்டு போச்சி.' மதுரையில் மீனாட்சி தியேட்டர். வெற்றி விழா நிகழ்ச்சிக்கு ராஜேஷ் கன்னா  நேரில் வருகை தந்தார்.

ராஜ் கபூர் இயக்கிய படம் 'பாபி' அதே மீனாட்சி தியேட்டரில் தான்.

திருச்சியில் அருணா தியேட்டரில் 'பாபி' வெற்றி விழாவுக்கு ராஜ்கபூர் வந்தார் என்பார்கள்.

'ஆராதனா' கதாநாயகன் ராஜேஷ் கன்னாவும் 'பாபி' கதாநாயகி டிம்ப்ள் கபாடியாவும் காதல் திருமணம் செய்து கொண்ட போது தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் கொண்ட பரபரப்பு! படபடப்பு!

அந்த 'யாதோன் கி பாராத்' மதுரை பரமேஸ்வரி தியேட்டரில்!
 தர்மேந்திரா  சின்ன ரோல் தான். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' ஜீனத் அமன், டாரிக், விஜய் அரோரா எல்லாம் கூட  மதுரை கரிமேடு, முரட்டம்பத்திரி,ஆரப்பாளையம், சல்லிகளுக்கு கூட நெருங்கிய சொந்தக்காரர்களாகிப்போனார்கள்.

தொடர்ந்து 'ஷோலே' -  அம்ஜத் கான், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஹேமா மாலினி, அமிதாப் தமிழக ரசிகப்பெருமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர் என சொல்லவும் வேண்டுமா?

அந்தக் கால கட்டங்களில் பொதுவாக இந்திப்பாடல்கள் பற்றி மிகுந்த ப்ரேமை அன்றைய 'யூத்' குலத்திடம் 'திடமாக' இருந்தது.
எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் இசையை விட  பர்மன்( அப்பா எஸ்.டி.யும் மகன் ஆர்.டியும்) இசை, ரொம்பச் சிறப்பானதாக சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் தெரிய வந்தது! லக்ஷிமி காந்த் பியாரிலால் இரட்டையர்கள் 'பாபி' இசை!
கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடல்கள்.
('பாபி' படத்தில்  பாடகர் ஷைலேந்தர் சிங் )

இந்தி படங்களில் 'வண்ணக்குளுமை' தமிழ் படங்களில் இல்லை என்ற அதிருப்தியும் இருந்தது.

ஹீரோ நடிகர்கள் இமேஜ் பார்க்காமல்  ஷோலே படங்களில் இணைந்து நடித்த விஷயம் தமிழ் ரசிகப்பெருமக்கள் கண்டறியாத விஷயம்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி பற்றிய ஆயாசம் அன்றைய காலேஜ் யூத்களிடம் நிச்சயமாக ஏற்பட்டுப்போனது. அதற்கு ராஜேஷ் கன்னாவின் ஸ்டைல் ரொமான்ஸ் மீது ஏற்பட்ட பிரமிப்பு தான் காரணம். தர்மேந்திராவின் அந்த அழகான சிரிப்பின் ஈர்ப்பு.
பொதுவாக இந்தி நடிகர்களின் ஸ்டைல் பற்றி தமிழக கல்லூரிப் பெண்கள் மத்தியிலும் மிகப்பெரிய கிளுகிளுப்பான கிளர்ச்சி.

தமிழ் சினிமாவில் ஒரு ஆறுதல் அந்த  1970களின் முன் பகுதியில் கே.பாலச்சந்தர் படங்கள் மட்டுமே.

'ஆராதனா' ராஜேஷ் கன்னா - ஷர்மீளா
 http://drop.ndtv.com/Movies/images/articles/big/aaradhana-rajeshk.jpg


'பாபி' ரிஷி கபூர்- டிம்ப்ள் கபாடியா
 


 'ஷோலே'தர்மேந்திரா- ஹேமா மாலினி , அமிதாப் - ஜெய பாதுரி

யூத், யூத், யூத்.

இங்கே தமிழ் புது முக கதா நாயகிகள் எம்.ஜி.ஆருடன், சிவாஜியுடன்,ஜெய் சங்கருடன், முத்துராமனுடன் தான் ஜோடி சேர்ந்தாக வேண்டிய தலை விதி!

பின்னால் இன்னொரு வேடிக்கை அப்போது.
ராஜேஷ் கன்னாவின் 'ஆராதனா' சிவாஜி நடிப்பில் சிவகாமியின் செல்வன்.


யாதோன் கி பாரத் எம்.ஜி.ஆரின் நாளை நமதே. தர்மேந்திரா, விஜய் அரோரா இருவர் ரோலையும் எம்.ஜி.ஆர் ஒருவரே செய்தார்.
 http://www.filmigeek.net/images/vlcsnap2126129.png


இந்த இரண்டு படத்தையும் தமிழ் ரசிகப்பெருமக்கள் ஏளனச்சிரிப்புடன்  தான்  'ப்ப்பூ..' என்றார்கள். ஆராதனா, யாதோன் கி பாரத் இரு படத்தையும் சலிக்காமல் ஐந்து தடவை, பத்து தடவைக்கு மேல்  பார்த்த தமிழனுக்கு சிவகாமியின் செல்வனும், நாளை நமதேவும் தமாஷ் படங்களாகத் தோன்றியதை புரிந்து கொள்ள முடியும்.

நல்ல வேளை! ஷோலே தமிழில் எடுக்கப்படவில்லை!
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்

எம்.ஜி.ஆர் எடுத்திருந்தால் எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் செய்திருப்பார். தர்மேந்திரா, அமிதாப் இருவர் வேடத்தையும் நான் தான் செய்வேன் என்று பிடிவாதம் செய்திருப்பார். அப்புறம் சஞ்சீவ் குமார் ரோல் அசோகனுக்கு. அம்ஜத் கான் ரோல் நம்பியார் செய்து விளங்க வைத்திருப்பார்!

எம்.ஜி.ஆரே அந்த அமிதாப் ரோல் செய்ய நேரும்போது அந்த ரோல் சாக முடியாது. ரசிகன் ஒத்துக்கொள்ள மாட்டான். எனவே வில்லனை இரண்டு எம்.ஜி.ஆரும் சேர்ந்து கொன்று குவித்து ரசிகனின் விசில் வாங்கியிருப்பார்கள்!
சரி! சிவாஜி செய்திருந்தால் தர்மேந்திரா, சஞ்சீவ் குமார் இரண்டு பேர் கதாபாத்திரங்களையும் சிரமேற்கொண்டு  நிறைவேற்றியிருப்பார். அமிதாப் ரோல் முத்துராமனுக்கு. அம்ஜத் கான் ரோல் பாலாஜிக்கு! 





http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/the-really-biggggggg/sholay-april-17.jpghttp://trendingonindia.com/wp-content/uploads/2014/06/Chal-Dhanno-aaj-teri-Basanti-ki-izzat-ka-sawaal-hai.jpg

http://4.bp.blogspot.com/-jKYyGJ52Mqc/UFPDPcQAM4I/AAAAAAAADQ8/NDOKpvTMXH4/s1600/Sholay5.jpg