Share

Dec 11, 2012

Herculean Task



எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் கணக்கு தப்பிவிட்டால் பெரும் நஷ்டம் தான்.
எம்.ஜி.ஆர் சனீஸ்வரன் போல. லாபம் அள்ளிக்கொடுத்தாலும் உண்டு.படம் எடுக்கும்போதே பெருங்கஷ்டம் ஆகி ஆயுள் முழுவதும் மீள முடியாத நஷ்டம் ஆகவும் வாய்ப்பு இருந்தது. மரண அடி தான்.
சாதாரணமாகவே படம் எடுத்து கையை சுட்டுக்கொள்வது என்பது ஒரு புறம். வீட்டைக்கட்டிப்பார்,கல்யாணம்பண்ணிப்பார்,படத்தை எடுத்துப்பார் என்று சிரமமான விஷயங்கள் பற்றி சொல்லலாம்.
படம் எடுக்கும்போது ஏற்படும் சிரமங்கள்,தொடர் மாறுதல்கள்,எதிர் பாரா மாற்றங்கள் போன்றவற்றை ஹாலிவுட்டில்  Development Hell என்று சொல்வார்கள்.ஜாம்பவான்களுக்கு கூட இந்த Development Hell சமாச்சாரங்கள் எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய எதிர் கொள்ளவேண்டிய நிலை தான். படம் develop ஆவதே  hell என்கிற நிலை. 
படம் ஓரளவு வளர்ந்த பின் சிக்கல் ஆரம்பித்து விடும்.

அவருடைய அண்ணன் சக்ரபாணியை சமாளிப்பதே கூட பெரும்பாடு என்பார்கள்.எம்.ஜி.ஆர்  நேரடியாக தான் பேச விரும்பாத விஷயங்களையெல்லாம் அண்ணன் மூலம் தயாரிப்பாளர்களிடம் பேசி படாத பாடு படுத்தி விடுவார். அதாவது தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணன் சக்ரபாணியே டப்பிங் பேசி ’உண்டு இல்லை’யென்று ஆக்கி விடுவார். சந்திரபாபுமாடி வீட்டு ஏழை’  படம் எடுத்த போது
சக்கரபாணி நாங்க என்ன சும்பக்கூதிகளா..என்று
கேட்க சந்திரபாபு “ நாங்க என்ன ஊம்பறதுக்கா வந்திருக்கோம் ” என கூப்பாடு போட்டு

நாற்காலியை தூக்கி சக்கரபாணியை தாக்கப் போகிற அளவுக்கு ரசாபாசமாகியிருக்கிறது.
ஐய்யோ பெரியவரை பகைத்து விட்டோமே என்று கவலையில் சந்திரபாபு அளவுக்கு மீறி குடித்து விட்டு படுத்து விட்டார்.ஓரிரண்டு நாள் கழித்து எழுந்து ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சிக்கு போனார்.அங்கே எம்.ஜி.ஆர் இவரைப் பார்த்து அழகாக சிரித்து “பாபு சார்!” என்றார். இது தான் எம்.ஜி.ஆர்! His beaming smile!
'எம்.ஜி.ஆர் படம்' எடுப்பது Herculean Task.
ஒரு எம்.ஜி.ஆர் படம் எடுத்து சம்பாதித்தை எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பின் போதே இழந்துஉள்ளதும் போச்சு நொல்ல கண்ணாஎன்று தவித்து தக்காளி விற்கும் நிலை கூட பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாண்டோ சின்னப்பா தேவர் ‘ தாய்க்குப்பின் தாரம்’ எடுத்து விட்டு  எம்.ஜி.ஆர் சங்காத்தமே வேண்டாம் என்று அடுத்து ரஞ்சனை வைத்து நீலமலைத்திருடன், கன்னட உதயகுமாரை வைத்து செங்கோட்டை சிங்கம்,ஜெமினி கணேசனை வைத்து வாழவைத்த தெய்வம்,ஆனந்தன் நடித்த கொங்கு நாட்டு தங்கம் என்று எடுத்த நிலை.அதன் பின் தாய் சொல்லைத்தட்டாதே துவங்கி காதல் வாகனம் வரை எம்.ஜி.ஆருடன் இணைந்து தொழில்செய்த பின் பிரிந்து, மீண்டும்நல்ல நேரம்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது வரைதேவர்-எம்.ஜி.ஆர் love and hate relationship’ பற்றி ஒரு பெரிய புராணமே பாடலாம்.
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வரும்போது தேவர் அந்தப்படத்தில் நடிக்கிற வில்லன் அசோகனைப் பார்த்து
 ஏன்டா ! சோத்தை தான திங்கிற.காசு வாங்கிறீல்ல. எருமை மாடு. லேட்டா வர்றியேன்னு  திட்டுவார்.
விஜயா-வாஹினி அதிபர் நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்துஎங்கவீட்டுப்பிள்ளைபடம் எடுக்கப்போவதை சொன்னபோது சினிமாவுலகில்எம்.ஜி.ஆரை வைத்தா!” என்று தான் கேட்டிருக்கிறார்கள்.
யு.ஆர்.ஜீவரத்தினம் என்று ஒரு பழம்பெரும் நடிகை. பி.யு.சின்னப்பா நடித்தஜகதல பிரதாபன்’(1944) படத்தில் நடித்த கதாநாயகியரில் ஒருவர். ’வால்மீகி’ (1946)யிலும் நடித்திருக்கிறார்.இவருடைய கணவர் வெங்கிடசாமி செட்டியார். ஜூபிடர் சோமுவிடம் புரடக்சன் மேனேஜராக வேலை பார்த்தவர். இவருக்கு சனிப்பார்வை! எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப்போட்டுசிரிக்கும் சிலைஎன்ற படம் எடுக்க திட்டம் போட்டார்.அவர் அந்த அனுபவத்தைப் பற்றி பிற்காலத்தில் சொல்வாராம்:”எம்.ஜி.ஆரை வைத்துசிரிக்கும் சிலை’என்று ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு பிறர் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன்.”



கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆர்படம் தாலிபாக்கியம்.

அசோகமித்திரன் சொல்கிறார் : கண்ணாம்பா அவர்களுக்கு தாலி,வீடு,வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்து விட்டார்.

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் சொல்வது: மைசூரில் தாலி பாக்கியம் யூனிட் தங்கியிருந்த போது படப்பிடிப்பிற்கு ஸ்ரீரங்கபட்டினம் கிளம்ப ரெடியாகிக்கொண்டிருந்த போது நாகபூஷணம் “ படப்பிடிப்புக்காக கொண்டு வந்திருந்த மூன்று லட்சம் ரூபாய் தொலைந்து போய் விட்டது” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உடனே எம்.ஜி.சக்கரபாணியின் மைத்துனர் மூலம் மூன்று லட்சம் சென்னையிலிருந்து எடுத்து வரச்செய்து உதவியதுடன் அந்தப் பணத்தை திருப்பித் தரவேண்டாம் என்று சொல்லவும் நாகபூஷணம் தன்னை விட இளையவரான எம்.ஜி.ஆர் காலிலேயே விழுந்திருக்கிறார்.

அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபு நடிப்பதற்கு சம்பளமாக எம்.ஜி.ஆருக்கு அவர் கடனாகத் தரவேண்டியிருந்த சில லட்சங்களை பெருந்தன்மையாக கழித்துக்கொண்டிருக்கிறார்.

மாடி வீட்டு ஏழை படம் எடுப்பதற்கு முன் கண்ணதாசன் ’கவலையில்லாத மனிதன்’ படம் சந்திர பாபுவை கதாநாயகனாக்கி எடுத்த போது பட்ட அவஸ்தை. கண்ண தாசனை படாத பாடு படுத்திய சந்திரபாபு பற்றி ’மனவாசம்’ நூலில் கவிஞர் எழுதியுள்ளார்.

உண்மை வேட்கையில் அசோகமித்திரன் சொல்வது போல ரெண்டாங்கிளாஸ் பையன் கணக்கிலே போடற மாதிரி சரி-தப்புன்னு அவ்வளவு சுலபமாப் பொய் நிஜம் கண்டு பிடிக்கமுடியாதுன்னு மட்டும் தெரியும்.

அசோகன் ‘நேற்று இன்று நாளை’ எடுத்து பட்ட அவதிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் கட்சி நடவடிக்கையை மீறியும் காரணங்கள் இருக்க முடியும். 
ஏ.பி.என் ’நவரத்தினம்’எம்.ஜி,ஆர் படம் எடுத்த பின் இறந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மீது முதலீடு செய்யும்போது அவரை வைத்து வாரிக்கொட்டி விடமுடியும் என்ற நம்பிக்கை இருந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும்.பட தயாரிப்பின் விளைவுகளை தாங்கக்கூடிய பொருளாதார பின்புலம் இருந்திருக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் 1977ல்முதல்வரான போது  தான் நடித்து நின்று போன ’அண்ணா என் தெய்வம்’ படத்தயாரிப்பாளருக்கு சாவகாசமாக பாக்யராஜின் ’அவசர போலீஸ்’ மூலம் நிவாரணம் காண நடவடிக்கை எடுத்தார். ஆனால் பாக்யராஜ் படம் ரிலீஸ் ஆனபோது எம்.ஜி.ஆரே உயிருடன் இல்லை.1987ல்அவருடைய பத்து வருட ஆட்சியே முடிவுக்கு வந்திருந்தது.1990ல் தான் ‘அவசரபோலீஸ் 100’ ரிலீஸ் ஆனது.
 


http://rprajanayahem.blogspot.in/2012_03_01_archive.html

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_4796.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.