Share

Aug 22, 2012

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

 Aug 1,2008

   Rimbaud.PNG

ETERNITY

It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான். குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன். 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன்.
ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான். Baby of the poets!26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .
இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும்"கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்
ரைம்போ,கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான்?
"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனசில அமுக்கி வச்சுகிட்டு
தவிக்கிறேன்யா. அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம?"னு
அல்லாடுறான்களே். சான்ஸே இல்ல!

Shit!புழுக்கையை போட்டுக்கங்க.என்னை எதுக்குடா  மோந்து பாக்க சொல்றீங்க?

...................

Aug 27, 2008


ரைம்போவும் ஆத்மாநாமும்



'One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her'
- Arthur Rimbaud
in “ A season in Hell”


நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

ஆர். பி. ராஜநாயஹம் said...

"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை. வரிகள் ஏறக்குறைய இவைதாம்: "கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
26-Aug-2008 12:59:00

நாகார்ஜுனன் said...

சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
26-Aug-2008 13:04:00
..............
Sep 28,2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும்!


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "
" பரிதி புணர்ந்து படரும் விந்து "
"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "
" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "
"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "
.......................................................


http://thisrecording.com/storage/poetpc.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1260396218576




Dec 26, 2009


A life full of sweet stupidities!


One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry!

ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities! "

"Ah! To return to life! To stare at our deformities. "ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது. தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள். 
 

ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius! An infant Shakespeare! Baby of the French poets!உடல் இச்சையை மறுத்த கிறிஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.
“You,my parents, have ruined my life, and your own.”

   


பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு சென்ற போது ரைம்போ வை தன்னுடன் வாழ அழைத்தான். அப்போது ரைம்போவுக்கு 17வயது .வெர்லைன் 27 வயது இளைஞன். அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள். வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.
The devastating love affair of Verlaine and Rimbaud...
there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.
சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.




ரைம்போவின் Bad Blood


“Does this farce has no end?
My innocence is enough to make me cry. Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."
"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "




Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.


இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது. ரைம்போ-வெர்லைன் இருவருக்கிடையேயான வன்மையான உணர்வுப்பூர்வமான ஓரின உறவைப் பற்றிய படம்.




 http://images5.fanpop.com/image/photos/26000000/Leo-as-Arthur-Rimbaud-in-Total-Eclipse-leonardo-dicaprio-26095950-1066-580.jpg

2 comments:

  1. 21ம் தேதி எந்த பதிவும் இல்லையே சார். ஓ பிறந்த நாள் கொண்டாட்டமா? வாழ்த்துகள் சார்.

    ஜெ. பாபு
    கோவை

    ReplyDelete
  2. அடடே! கோவை ஜெ.பாபு சார்! எப்படி இதை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்!நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.