Share

Dec 29, 2012

Very badly in need of money



சரி என்றோ தவறு என்றோ இரண்டு விஷயம்.
Akrasia என்று ஒரு கிரீக் கான்செப்ட். எது சரியோ அதைச்செய்யாமல் இருப்பது. தவறானது எதுவோ அதைச் செய்வது. Akrasiaவால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கத்தில் இருப்பவனோடு,குடிபோதையில் இருப்பவனோடு  அரிஸ்டாட்டில் உதாரணப்படுத்துவாராம்.

கிரேக்க துன்பவியல் நாடகங்களில் கதாநாயகனுக்கு நன்மையோ,தீமையோ தேர்ந்தெடுக்கும் உரிமையை தெய்வங்கள் கொடுத்திருக்கும்.அவன் எப்போதுமே தீமையைத்தான் தேர்ந்தெடுப்பான்.The worse I do, the more popular I get என்று குதூகலமா?

நன்மை,தீமையென்று இல்லாமல் உணர்வுகளை அடையாளம் காண்பதில் கூட சிக்கல். தி.ஜானகிராமன் :”நாம அனேகமா வருத்தத்தைச் சந்தோஷம்னு நெனச்சுக்கிறோம்.சந்தோஷத்தை வருத்தம்னு நெனச்சுக்கிறோம்.”


அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள்.சுதாகர் கதாநாயகன். தயாரிப்பாளர் ’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன்.இயக்குனர் பி.ஆர்.சோமு.
ஹிண்டு ரங்கராஜன் வீட்டிலேயே முன்னறையில் ஆஃபிஸ்.

 ஒரு நடிகையின் அப்பா வருகிறார். ஒரு ஃபோன் பேசவேண்டும் என்று டைரக்டரிடம் சொல்லி விட்டு டயல் செய்கிறார். “நான் ...நடிகயோட அப்பா.. என்னங்க இப்படி செய்றீங்க…போன மாதமே சம்பளம் செட்டில் பண்றேன்னு சொன்னீங்க….இப்படி இதோட நாலு தடவை சொல்லிட்டீங்க. என்னது..அடுத்த மாசமா?..No..No..No..No..I’m very badly in need of money now..This is the limit.. I’m very badly in need of money.. No..No excuses..I’m very badly in need of money…No..No.. I’m very badly in need of money…” கோபத்தோடு ஃபோனை டக்கென்று வைக்கிறார்.
டைரக்டர் “யார் கிட்ட பேசினீங்க.?”
”சலீம் கிட்ட தான்.பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் சலீம். ”அவர் எடுத்த இன்னொரு படம் என் மகளுக்கு payment இன்னும் கடைசி செட்யூலுக்கு செட்டில் பண்ண மாட்டேங்கிறாரு..”
டைரக்டர் பதறி ”என்னங்க அவர் கிட்டப்போய் இவ்வளவு வெரப்பா பேசறீங்க..இது நியாயமே கிடையாது.”
“யாரா இருந்தா என்னங்க…I’m very badly in need of money.”
“சலீம் சார் கிட்டப்போய் இப்படி பேசறீங்க.” டைரக்டர் புலம்புகிறார்.

 பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் தயாரித்து அரைகுறையாய் நின்று போனது ஒரு படம். இப்படி அறைகுறையாய் படம் நின்று போய்விட்டால் தயாரிப்பாளரை தரித்திரம் பீடித்து விட்டது என்று அர்த்தம்.மோகன் பாபு நடித்த படம். மோகன்பாபுவுக்கு பிராமணர் வேடம். ஷாட்டின் போது பூணூல் மாட்டவேண்டும். கொல்ட்டி மோகன் பாபு பூணூல் வேண்டி அசிஸ்டண்ட் டைரக்டரிடம் ”ப்பூல்..?ப்பூல்..?”என்று கூப்பாடாம்! ’ணூ’ dropped. ”தூக்கிக்காட்டனுமா?”என்று ஒரு புரடக்‌ஷன் அஸிஸ்டண்ட் சொன்னானாம்.

ஆஃபிஸில் போன் பேசி விட்டு நடிகையின் தந்தை மேலும் பல கதை பேசிவிட்டுப் போனவுடம் “பைலட் ப்ரேம்நாத்” சலீம் கிட்டப்போய் இப்படி இந்தாளு ரஃப்பா பேசுறாரே..”ன்னு மீண்டும் டைரக்டர் புலம்ப ஆரம்பிக்கிறார்.

மறு நாள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இரண்டாவது ஃப்ளோரில் ஷூட்டிங்.சுதாகருடன் நடிகை நடிக்கிற காட்சிகள்.
ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்து இரவு கம்பெனி கார் நடிகையை வீட்டிற்கு அழைத்துப்போன சிறிது நேரத்தில் ஸ்டுடியோவுக்கு ஒரு போன்.
” நடிகையோட அப்பா  இறந்து விட்டார்.உடனே அவர வீட்டுக்கு அனுப்புங்க.”

மறு நாள் பிணத்தை அந்த டவர் ப்ளாக்கிலிருந்து படி வழியாக இறக்கும்போது அந்த நடிகை தன்னை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிற பெண்கள் சூழ அழுதவாறு “இருங்க.. ஒரு நிமிஷம்.. என்னை விடுங்க…”
” என்னம்மா..”
” என்னை விடுங்க.. ஒரு நிமிஷம்..”
பிணத்தை இறக்கிக்கொண்டு இருப்பவர்கள் சற்றே நிற்கிறார்கள்....சூழ நிற்பவர்கள் கவனம் முழுவதும் இப்போது நடிகை மீது தான்..

  “ அப்ப்பா.. போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டுப் போங்கப்பா”

An actress has an enormous opinion of herself !

Dec 21, 2012

எங்க எம்.ஜி.ஆரா இருந்தா



’மிஸ்ஸியம்மா’ படத்தில் முதலில் பானுமதி தான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பின்னர் மாற்றப்பட்டு சாவித்திரி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.தமிழில் ஜெமினி கணேசன், எஸ்,வி.ரங்கா ராவ், தங்கவேலு, ஜமுனா ஆகியோரும் நடித்த இந்தப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட போது இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்தார்கள். என்.டி.ராமாராவ் கதாநாயகன்.அக்கினேனி நாகேஸ்வர ராவ் தமிழில் காமெடியன் தங்கவேலு நடித்த பாத்திரத்தில் நடித்தார்! ’தேவதாஸ்’ நாயகன் அதன் பிறகு காமெடி ரோல் செய்திருக்கிறார்!

’குறவஞ்சி’ படத்தில் முதலில் எஸ்.எஸ்.ஆர் கதாநாயகனாக ஒப்பந்தமாகிய நேரத்தில் அவர் விஜயகுமாரியை திடீர் திருமணம் செய்திருக்கிறார்.அதனால்  தயாரிப்புத்தரப்புக்கு ஏற்பட்ட இடைஞ்சலால் சிவாஜி கணேசன் நடிக்க நேர்ந்திருக்கிறது. ‘மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள்! வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்!’

’வேட்டைக்காரன்’ படத்தில் சரோஜாதேவி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய அம்மா செய்த பந்தாவால் சாண்டோ சின்னப்பா தேவர் மனம்புண்பட்டுப் போனார். அதனால் எம்.ஜி.ஆருக்கு சாவித்திரி கதாநாயகியாகியிருக்கிறார்.

’பணமா பாசமா’ 1968ம் ஆண்டு வந்த படம். இயக்குனர் திலகம்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம்.ஜெமினி கணேசன்,சரோஜாதேவி, நாகேஷ் நடித்த படம்.
பணமா பாசமா எஸ்.வரலட்சுமி, டி.கே பகவதி, விஜய நிர்மலா ஆகியோருக்கு புது வாழ்வு கொடுத்த படம்.
குறிப்பிட்ட முந்தைய கால கட்டத்தில் எஸ்.வரலட்சுமி, டி.கே.பகவதி அந்த நேரத்தில் மறக்கப்பட்ட கலைஞர்கள்.
எஸ்.வரலட்சுமி வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜிக்கு ஜோடி.அப்புறம் கந்தன் கருணையில் இந்திராணியாக “வெள்ளிமலை மன்னவா வேதம் நீயல்லவா” என்று தன் குரலில் பாடி நடித்திருந்தார்.
டி.கே.பகவதி சம்பூர்ண ராமாயணத்தில் ராவணன். சிவகெங்கைச் சீமையில் பெரிய மருது.
விஜய நிர்மலா ’எங்க வீட்டுப் பெண்’ தமிழ் படம் மூலம் அறிமுகம்.அடுத்து கே.எஸ்.ஜியின் ‘சித்தி’படத்தில் எம்.ஆர்.ராதா மகளாக,முத்துராமனுக்கு ஜோடியாக (சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா?பாடல்)
பணமா பாசமா படத்தில் எஸ்,வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
 அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
’அலேக்’ நிர்மலா என்று பேர் பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடி கட்டினார் விஜய நிர்மலா.
அமெரிக்கையான கண்ணியமான அப்பாவாக எல்லோர் மனதிலும் பகவதி இடம் பிடித்தார்.
அதன் பிறகு தமிழ்ப்படங்களில் சிலவருடங்கள் பிசியாக நல்ல ரவுண்டு வந்தார்கள்.
பணமா பாசமா மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குனர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம். சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை.நீ தான் அந்த ரோலை பிரமாதமாக செய்யமுடியும்” என்று கெஞ்சியிருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு மாமியாராக சாவித்திரி!
சாவித்திரி பதில்: வாத்யாரே! நான் தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.
கே.எஸ்.ஜிக்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை. அந்த ரோலுக்கு ஜெமினி தான் சரியான சாய்ஸ்.
சாவித்திரி உடனே ’வரலட்சுமியை மாற்ற வேண்டாம். நான் அவளுக்கு கவுன்சலிங் செய்கிறேன்.இனி பிரமாதமா அவ நடிப்பா’ என்று எஸ்.வரலட்சுமியை நேரில் சந்தித்து கோச்சிங் கொடுத்திருக்கிறார்.

ராஜேஷ் கன்னா தூள் கிளப்பிய ‘சச்சா ஜூட்டா’ படத்தை வாங்கி ரீமேக் செய்ய ரொம்ப பிரயாசைப்பட்டவர் நடிகர் பாலாஜி. ஆனால் எம்.ஜி.ஆர் அந்தப்படத்தின் மீது கண் வைத்து விட்டார். பாலாஜி வாங்கியிருந்தால் சிவாஜி கணேசன் தான் நடித்திருப்பார்.எம்.ஜி.ஆர் தான் ’நினைத்ததை முடிப்பவன்’ ஆயிற்றே! படத்திற்கு ’நினைத்தை முடிப்பவன்’ என்றே தான் பெயரும் வைத்தார்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர்.
’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”

நாம், மதுரை வீரன், பாசம் போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் இறப்பதாக காட்சி உண்டு. அதனால் இடை வேளையிலேயே ரசிகர்கள் பலர் தியேட்டரை விட்டு கிளம்பி விடுவார்கள். இடைவேளைக்கு பிறகு படம் பார்த்தாலும் க்ளைமாக்ஸ் பார்க்காமல் எழுந்து சென்று விடுவார்கள்!

Dec 15, 2012

Taste differs

புத்தனே
ஞானம் வாய்த்த பின்
அழக்கூடுமோ
உன்னால்
- கலாப்ரியா


அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். அதே போல இந்த நாவலில் வருகிற டைரக்டர் ராம்சிங் பதிபக்தி,பாகப்பிரிவினை,பாசமலர்,பாலும்பழமும்,பார்த்தால் பசி தீரும்,பந்த பாசம் படங்களை இயக்கிய பீம்சிங் தான்.
கரைந்த நிழல்கள் நாவலின் ஆறாவது அத்தியாயத்தில்
செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு ராம்சிங் படம் திரையிடப்படுகிறது. அந்தப்படத்தை டைரக்ட் செய்ததற்காக ராம்சிங்குக்கு ரொக்கப்பரிசும் கிடைத்திருந்தது.வெளியே போகமுடியாத சூழ்நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்த்தார்கள். டெலிபோன் பேசவேண்டியிருப்பதைக் காரணமாக வைத்துக் கொட்டகை வெளியில் வந்த வர்த்தகசபைத் தலைவர்,பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரியிடம் ‘நீங்க அந்தப்படத்தைப்பார்க்கலியா?’என்று கேட்கிறார். பதில்’அந்தத் தலைவலியை யார் பார்த்துச் சகிச்சுக்கிறது?’
அன்று மாலை செக் விருந்தினர்களுக்கு  ராம்சிங்கை பிரஸ் இன்பர்மேஷன் அதிகாரி தான் அறிமுகப்படுத்துகிறார்.’இவர் படத்தைத் தான் நீங்கள் இன்று காலை பார்த்தீர்கள்,’
செக் தலைவர் ’ஓ…. அப்படியா! ..ரொம்ப நல்ல படம் !சோக அம்சம் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது, ‘
அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக்கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கை போய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய்க் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
செக் காரர் இறுதியாக சொல்வது”உங்கள் கதாநாயகர்களுக்குப் பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப்பட்டது.அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றிற்கும் அழுது விடுகிறார்.”
எல்லாரும் லேசாகச் சிரித்தார்கள்.ராஜ்கோபால் சிறிது உரக்கச்சிரித்துவிட்டான்.
உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டின் ’ஒருசிலரால்’ கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் கொண்டவர்.
அசோகமித்திரன் மேற்கண்டவாறு விவரிக்கும் அந்த நடிகர் யார் என்பது படிப்பவர் யாருக்கும் புரியும். சிவாஜி கணேசன்.!
…..
89 வயது மிருணாள் சென் பெங்காலி டைரக்டர். புவன் சோம், கோரஸ், ஒக்க ஊரி கதா, பரசுராம், காந்தார்,காரிஜ்,ஏக் தின் அச்சானக் போன்ற திரை ஓவியங்களை தீட்டிய மேதை.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்க்யுசுக்கு நண்பர்.
எத்தனையோ உலகத்திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் பரிசு வாங்கியிருக்கின்றன.பல திரைப்பட விழாக்களில் இவர் ஜட்ஜ் ஆக கௌரவிக்கப்பட்ட கலை மேதை.
மிருணாள் சென் தனக்கு கமல் ஹாசன் நடிப்பு தான் பிடிக்கும் என்று 1998ல் எஸ்.விஜயன்(சினிமா நிருபர்) அவர்களிடம் 14 வருடம் முன்
( தினமலர் வாரமலர் 25,அக்டோபர்,1998)சொன்னாராம்.’அப்படியென்றால் சிவாஜி நடிப்பு?’ என்று கேட்டதற்க்கு ஒரு மாதிரியாக முகத்தை சுளித்தாராம்.’எனக்கு அழுது நடிப்போரைக்கண்டாலே பிடிக்காது.ஆண்கள் அழுவது கூடாது ‘ என்றாராம். அழுகையும் ஒரு நடிப்பு தானே?’ என்று இவர் கேட்ட போது மிருணாள் சென் பதில் ‘நோ நோ’
...

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/child-is-father-of-man.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_23.html



Dec 11, 2012

Herculean Task



எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் கணக்கு தப்பிவிட்டால் பெரும் நஷ்டம் தான்.
எம்.ஜி.ஆர் சனீஸ்வரன் போல. லாபம் அள்ளிக்கொடுத்தாலும் உண்டு.படம் எடுக்கும்போதே பெருங்கஷ்டம் ஆகி ஆயுள் முழுவதும் மீள முடியாத நஷ்டம் ஆகவும் வாய்ப்பு இருந்தது. மரண அடி தான்.
சாதாரணமாகவே படம் எடுத்து கையை சுட்டுக்கொள்வது என்பது ஒரு புறம். வீட்டைக்கட்டிப்பார்,கல்யாணம்பண்ணிப்பார்,படத்தை எடுத்துப்பார் என்று சிரமமான விஷயங்கள் பற்றி சொல்லலாம்.
படம் எடுக்கும்போது ஏற்படும் சிரமங்கள்,தொடர் மாறுதல்கள்,எதிர் பாரா மாற்றங்கள் போன்றவற்றை ஹாலிவுட்டில்  Development Hell என்று சொல்வார்கள்.ஜாம்பவான்களுக்கு கூட இந்த Development Hell சமாச்சாரங்கள் எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய எதிர் கொள்ளவேண்டிய நிலை தான். படம் develop ஆவதே  hell என்கிற நிலை. 
படம் ஓரளவு வளர்ந்த பின் சிக்கல் ஆரம்பித்து விடும்.

அவருடைய அண்ணன் சக்ரபாணியை சமாளிப்பதே கூட பெரும்பாடு என்பார்கள்.எம்.ஜி.ஆர்  நேரடியாக தான் பேச விரும்பாத விஷயங்களையெல்லாம் அண்ணன் மூலம் தயாரிப்பாளர்களிடம் பேசி படாத பாடு படுத்தி விடுவார். அதாவது தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணன் சக்ரபாணியே டப்பிங் பேசி ’உண்டு இல்லை’யென்று ஆக்கி விடுவார். சந்திரபாபுமாடி வீட்டு ஏழை’  படம் எடுத்த போது
சக்கரபாணி நாங்க என்ன சும்பக்கூதிகளா..என்று
கேட்க சந்திரபாபு “ நாங்க என்ன ஊம்பறதுக்கா வந்திருக்கோம் ” என கூப்பாடு போட்டு

நாற்காலியை தூக்கி சக்கரபாணியை தாக்கப் போகிற அளவுக்கு ரசாபாசமாகியிருக்கிறது.
ஐய்யோ பெரியவரை பகைத்து விட்டோமே என்று கவலையில் சந்திரபாபு அளவுக்கு மீறி குடித்து விட்டு படுத்து விட்டார்.ஓரிரண்டு நாள் கழித்து எழுந்து ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சிக்கு போனார்.அங்கே எம்.ஜி.ஆர் இவரைப் பார்த்து அழகாக சிரித்து “பாபு சார்!” என்றார். இது தான் எம்.ஜி.ஆர்! His beaming smile!
'எம்.ஜி.ஆர் படம்' எடுப்பது Herculean Task.
ஒரு எம்.ஜி.ஆர் படம் எடுத்து சம்பாதித்தை எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பின் போதே இழந்துஉள்ளதும் போச்சு நொல்ல கண்ணாஎன்று தவித்து தக்காளி விற்கும் நிலை கூட பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாண்டோ சின்னப்பா தேவர் ‘ தாய்க்குப்பின் தாரம்’ எடுத்து விட்டு  எம்.ஜி.ஆர் சங்காத்தமே வேண்டாம் என்று அடுத்து ரஞ்சனை வைத்து நீலமலைத்திருடன், கன்னட உதயகுமாரை வைத்து செங்கோட்டை சிங்கம்,ஜெமினி கணேசனை வைத்து வாழவைத்த தெய்வம்,ஆனந்தன் நடித்த கொங்கு நாட்டு தங்கம் என்று எடுத்த நிலை.அதன் பின் தாய் சொல்லைத்தட்டாதே துவங்கி காதல் வாகனம் வரை எம்.ஜி.ஆருடன் இணைந்து தொழில்செய்த பின் பிரிந்து, மீண்டும்நல்ல நேரம்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது வரைதேவர்-எம்.ஜி.ஆர் love and hate relationship’ பற்றி ஒரு பெரிய புராணமே பாடலாம்.
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வரும்போது தேவர் அந்தப்படத்தில் நடிக்கிற வில்லன் அசோகனைப் பார்த்து
 ஏன்டா ! சோத்தை தான திங்கிற.காசு வாங்கிறீல்ல. எருமை மாடு. லேட்டா வர்றியேன்னு  திட்டுவார்.
விஜயா-வாஹினி அதிபர் நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்துஎங்கவீட்டுப்பிள்ளைபடம் எடுக்கப்போவதை சொன்னபோது சினிமாவுலகில்எம்.ஜி.ஆரை வைத்தா!” என்று தான் கேட்டிருக்கிறார்கள்.
யு.ஆர்.ஜீவரத்தினம் என்று ஒரு பழம்பெரும் நடிகை. பி.யு.சின்னப்பா நடித்தஜகதல பிரதாபன்’(1944) படத்தில் நடித்த கதாநாயகியரில் ஒருவர். ’வால்மீகி’ (1946)யிலும் நடித்திருக்கிறார்.இவருடைய கணவர் வெங்கிடசாமி செட்டியார். ஜூபிடர் சோமுவிடம் புரடக்சன் மேனேஜராக வேலை பார்த்தவர். இவருக்கு சனிப்பார்வை! எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப்போட்டுசிரிக்கும் சிலைஎன்ற படம் எடுக்க திட்டம் போட்டார்.அவர் அந்த அனுபவத்தைப் பற்றி பிற்காலத்தில் சொல்வாராம்:”எம்.ஜி.ஆரை வைத்துசிரிக்கும் சிலை’என்று ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு பிறர் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன்.”



கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆர்படம் தாலிபாக்கியம்.

அசோகமித்திரன் சொல்கிறார் : கண்ணாம்பா அவர்களுக்கு தாலி,வீடு,வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்து விட்டார்.

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் சொல்வது: மைசூரில் தாலி பாக்கியம் யூனிட் தங்கியிருந்த போது படப்பிடிப்பிற்கு ஸ்ரீரங்கபட்டினம் கிளம்ப ரெடியாகிக்கொண்டிருந்த போது நாகபூஷணம் “ படப்பிடிப்புக்காக கொண்டு வந்திருந்த மூன்று லட்சம் ரூபாய் தொலைந்து போய் விட்டது” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உடனே எம்.ஜி.சக்கரபாணியின் மைத்துனர் மூலம் மூன்று லட்சம் சென்னையிலிருந்து எடுத்து வரச்செய்து உதவியதுடன் அந்தப் பணத்தை திருப்பித் தரவேண்டாம் என்று சொல்லவும் நாகபூஷணம் தன்னை விட இளையவரான எம்.ஜி.ஆர் காலிலேயே விழுந்திருக்கிறார்.

அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபு நடிப்பதற்கு சம்பளமாக எம்.ஜி.ஆருக்கு அவர் கடனாகத் தரவேண்டியிருந்த சில லட்சங்களை பெருந்தன்மையாக கழித்துக்கொண்டிருக்கிறார்.

மாடி வீட்டு ஏழை படம் எடுப்பதற்கு முன் கண்ணதாசன் ’கவலையில்லாத மனிதன்’ படம் சந்திர பாபுவை கதாநாயகனாக்கி எடுத்த போது பட்ட அவஸ்தை. கண்ண தாசனை படாத பாடு படுத்திய சந்திரபாபு பற்றி ’மனவாசம்’ நூலில் கவிஞர் எழுதியுள்ளார்.

உண்மை வேட்கையில் அசோகமித்திரன் சொல்வது போல ரெண்டாங்கிளாஸ் பையன் கணக்கிலே போடற மாதிரி சரி-தப்புன்னு அவ்வளவு சுலபமாப் பொய் நிஜம் கண்டு பிடிக்கமுடியாதுன்னு மட்டும் தெரியும்.

அசோகன் ‘நேற்று இன்று நாளை’ எடுத்து பட்ட அவதிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் கட்சி நடவடிக்கையை மீறியும் காரணங்கள் இருக்க முடியும். 
ஏ.பி.என் ’நவரத்தினம்’எம்.ஜி,ஆர் படம் எடுத்த பின் இறந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மீது முதலீடு செய்யும்போது அவரை வைத்து வாரிக்கொட்டி விடமுடியும் என்ற நம்பிக்கை இருந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும்.பட தயாரிப்பின் விளைவுகளை தாங்கக்கூடிய பொருளாதார பின்புலம் இருந்திருக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் 1977ல்முதல்வரான போது  தான் நடித்து நின்று போன ’அண்ணா என் தெய்வம்’ படத்தயாரிப்பாளருக்கு சாவகாசமாக பாக்யராஜின் ’அவசர போலீஸ்’ மூலம் நிவாரணம் காண நடவடிக்கை எடுத்தார். ஆனால் பாக்யராஜ் படம் ரிலீஸ் ஆனபோது எம்.ஜி.ஆரே உயிருடன் இல்லை.1987ல்அவருடைய பத்து வருட ஆட்சியே முடிவுக்கு வந்திருந்தது.1990ல் தான் ‘அவசரபோலீஸ் 100’ ரிலீஸ் ஆனது.
 


http://rprajanayahem.blogspot.in/2012_03_01_archive.html

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_4796.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html