Share

Nov 18, 2009

முசிறியும் புதுமைப்பித்தனும்

புதுமைப் பித்தனின் நகைச்சுவை பற்றி பிரமிள் அது WITஅல்ல POWERஎன்பார்.
பொய்க்குதிரை என்ற சிறுகதையில் அந்த POWERபாருங்கள் .
நவராத்திரி கொலுவில் கிராம போன் சங்கீதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது .அந்த முசிறி சுப்பிரமணி அய்யர் பாட்டை கேட்காமல் லட்சுமியும் ,தோழிகளும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது பற்றி புதுமைப் பித்தன் SARCASTICஆக எழுதுகிறார் -
" கிராம போனில் , முசிறி இவர்களுடைய மனத்தை கவர முயற்சித்தும் முடியவில்லை . ஆனால் வெறுப்பு தோன்றாமல் பாட அவர் கிராமபோன் பிளேட்டாக மாறினால் தான் முடியும் . அது அங்கு நடந்து கொண்டிருக்கிறது."
முசிறி சுப்பிரமணி அய்யர் முகாரி பாடுவதில் விஷேச வல்லமை பெற்றவர் .
" என்றைக்கு சிவகிருபை வருமோ ?" முசிறி குரலில் மந்திரமாய் ஒலிக்கும் .உருக்கம் என்கிற பாவத்தை முசிறி அதி அற்புதமாய் குரலில் வெளிப்படுத்துவார் .

1 comment:

Note: Only a member of this blog may post a comment.