Share

Oct 13, 2009

Coterie -inner circle

பெரிய பிரபலமோ,சின்ன பிரபலமோ எந்த பிரபலத்தை
சுற்றியும் ஒரு Coterie அதாவது inner circle-( இவர்கள் பிரபலத்தை வசியப்படுத்தும் அபார சக்தி படைத்தவர்கள்) உண்டு.
பிறர் அந்த பிரபலமான நபரை நெருங்கி விட சாமானியமாகஅனுமதித்துவிடமாட்டார்கள். Possessiveness! தங்களுடைய இடம் பறி போய்விடக்கூடாதே! அவர்கள் பிரபலத்தின் குடும்பத்தாராக இருக்கலாம். அந்த பிரபலம் குடும்பம் , பாசம் உள்ளவராக இருக்கும் பட்சம்! (கருணாநிதியை சுற்றியுள்ள குடும்பத்தார் போல )அல்லது குடும்பத்தைக் கூட,கட்சிக்காரர்களைக்கூட நெருங்க விடாதவர்களாக இருக்க நேரிடலாம். (ஜெயலலிதாவை சுற்றியுள்ள மன்னார்குடி சசிகலா கும்பல் போல )பைபிளில் ஒரு எச்சரிக்கை வாசகம் : " உன்னுடைய வீட்டில் ஒரு அந்நியனை நுழையவிட்டால் அவன் உன் உறவினனையும் அன்னியனாக்கி விடுவான் "

காக்கைகள் கூட்டம் என்று வெளியிலிருப்போர், இவர்கள் பற்றி சொல்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் பிரபலத்தை சுற்றியிருக்கும்போது அந்த குடும்ப உறுப்பினர்களைச்சுற்றி காக்கைகள் இருக்கும் .

நெருக்கியடித்துக்கொண்டு மேலுலகில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாராயணனை பூலோக வாசிகள் தொழுவதற்கு சாமானியமாக விடமாட்டார்களாம் .தொழுதுவிட்டால் வைகுண்டம் போகும் வாய்ப்பு பூலோகவாசிகளுக்கும் கிடைத்து நெருக்கடி அதிகரித்து விடும்!
Pollutionபயம் .அதோடு தேவர்களை விட பெரியவர்களாகி விடுவார்களே! தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டான் என்று சொலவடை . ராமனை சரணடைய விபீஷணன் வந்த போது கூட வானரங்கள் ( தேவர்களின் வாரிசுகள் ) விபீஷணனை சேர்த்துக்கொள்ளவே கூடாது என எதிர்த்தனவாம் !
தேவர்கள் பற்றிதேவேந்திரன் பற்றியெல்லாம் ஏன் சிலாக்கியமாக எதுவுமே இல்லை . அசுரர்களை விட மேலானவர்கள் தேவர்கள் ...?!?...



தியாகய்யருக்கு அந்த பதட்டம் அதிகம் . அவருடைய பைரவி ராக கீர்த்தனை -
"உபச்சாரமு ஜேசே வாருன்னா ரனி
மரவகுரா "

'உனக்கு உபச்சாரம் பண்ண நிறைய பேர் இருக்கிறார்கள் . அதனால் என்னை மறந்து விடாதேடா ராமா
அனுமன் ,தம்பிமார் , சீதை உன்னோடு இருப்பது உறுதி என்பதால் மற்றவர் எதற்கு என்று என்னை மறந்து விடாதேடா ராமா '
இந்த பாட்டில் தொனிக்கும் அந்த பதட்டம்.

தியாகய்யர் அந்த Coterie யை ப்பற்றி ,அவர்கள் ராமன் அருகிருந்து செய்யும் பூஜை புனஷ்காரங்களை சிலாகித்துக்கூட புல்லரிப்பாக கரகரபிரியா ராகக்கீர்த்தனை " பக்கல நிலபடி" என்று அவர்களையும் கொஞ்சம் புகழ்ந்து பாடுகிறார் . ராமனுடனான தன் உறவுக்கு இவர்களால் பங்கம் வந்து விடக்கூடாதே!








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.