Share

Oct 18, 2009

பிழையான தகவல்கள்

வெகுசனப்பத்திரிக்கைகளில் எழுதப்படும் விஷயங்கள் படிக்கும்போது 'இது தவறாக எழுதப்பட்டிருக்கிறதே' என பலமுறை தோன்றும் .ஆனால் வாசகர் கடிதம் எழுதும் பழக்கம் கிடையாது . அப்படி சமீபத்தில் படித்த பிழையான தகவல்கள் இரண்டு பற்றி .

மதுரை சோமுவின் குரல் நாதஸ்வரம் பேசுகிற விசயங்களை பாட்டில் காட்டும் குரல் . தோடி ராகம் அத்தாரிடி சோமு தான் . நினைத்தவுடன் சோமு பாடிய எந்த கீர்த்தனையும் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடும் . சோமு பாட்டு ஜீவனுள்ளவை.

இவருடைய குருநாதர் சித்தூர் சுப்ரமணிய பிள்ளை . சோமு தெலுங்கு கீர்த்தனைகள் உச்சரிப்பு சரியில்லாவிட்டால் கடுமையாக குருகுலத்தில் கண்டித்தவர் . இவர்-சித்தூர் சுப்ரமணிய பிள்ளை - நாயுடு இனத்தை சார்ந்தவர் ! தன்னுடைய குரு காஞ்சிபுரம் நைனாபிள்ளை மீது மிகுந்த பக்தி காரணமாக அவருடைய பெயரில் உள்ள பிள்ளை - ஜாதிப் பெயரை தன் பெயரில் இணைத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது என்னவாயிற்று இன்று என்றால் குமுதம் வார இதழில் இசைவேளாளர் ஜாதி பற்றிய கட்டுரையில் இசைவேளாளர் பிரபலங்கள் பட்டியலில்தவறாக இவரையும் மதுரை சோமு ,நைனாப் பிள்ளையோடு சேர்த்துவிட்டார்கள் !

குருநாதர் பெயரில் அவருடைய சொந்த ஊர் நாமக்கல் இருந்தது என்பதற்காக அவருடைய சிஷ்யர் ஒருவர் , (வேறு ஊர்க்காரர்) தன் பெயரோடும் நாமக்கல்லை இணைத்துக்கொண்டது கர்நாடக சங்கீத உலகில் அந்தக்காலத்தில் நடந்திருக்கிறது .

....

அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா . இவர் நடித்த 'ஜாக்பாட் ஜாங்கோ' டப்பிங் படம் முப்பத்தைந்து வருடங்கள் முன் தமிழ்நாட்டில் பிரபலம் . அலேக் நிர்மலா ' இலந்தப் பயம் ' பாட்டு 'பணமா பாசமா ' (1968 )படத்தில் இடம் பெற்று இவரை பிரபலமாக்கியது . இவருக்கு அப்போதே கல்யாணமாகி பத்து வயதில் பெண் குழந்தை இருந்தது. ஒரு மகனும் கூட.அப்போது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் ( அவருக்கும் கூட திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் )அலேக் நிர்மலாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தினமலர் வாரமலர் இதழ் ஒன்றில் ' கந்தசாமி ' விக்ரம் படம் பற்றி கலைப்புலி தாணு பேட்டி கொடுத்திருக்கிறார் . அதில் கந்தசாமி படம் பற்றிய பெட்டி செய்தி குறிப்புகளில் ஒன்று . கந்தசாமி படத்தில் விக்ரம் உடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சி .பி . ஐ . ஆபீசராக நடித்திருக்கிறார் என்பது . இது சரிதான். தமிழ் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் . இது பிழையான தகவல் . அவர் நாற்பது வருடங்களுக்கு முன் பணமா பாசமா வெளி வந்த அதே 1968வருடத்தில் வந்த 'குழந்தைக்காக ' என்ற தமிழ்ப் படத்தில் பேபி ராணிக்கு அப்பாவாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

3 comments:

  1. என்சைக்ளோபீடியா சார் நீங்க :-)

    ReplyDelete
  2. Superb sir. Surely you must have heard "Thaye Yasodhe undhan" by Madurai somu. It is even better than Madurai Mani Iyer's version in my humble opinion. Mindboggling voice range, manodharmam, sruthi suddham. An exceptional musician.

    ReplyDelete
  3. ராஜநாயஹம்!
    நீங்கள் எழுதும்வரை போகிறபோக்கில் எழுதும் எழுத்தாளர்கள் கொஞ்சம் பயந்துதான் போவார்கள்.
    உங்களை ஒரு “பண்டாரம்” என்று சொல்லலாமா?
    (Bhandar என்றால் களஞ்சியம் என்று பொருள். “காதி பந்தர்(குரங்கு)” என்று சிலர் பேசுவதும் எழுதுவதும் அறியாத்தனம்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.