Share

May 7, 2009

Gorden and his phone

இருபது வருடங்களுக்கு முன் குவைத்தில் நடந்த சுவாரசியங்கள் பற்றி அங்கே வேலை பார்த்த என் சீனியர் சாம்சன் இரண்டு வருடங்களுக்கு முன் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய கலீக் 'கோர்டன்' என்ற அமெரிக்கன் பற்றி சொன்ன விஷயம் கீழே .

Gorden’s office

Gorden : Sam! What you do when your phone rings

Sam : Why..? I pick the phone and talk

Gorden : I don’t

Sam : Then why do you have a phone

Gorden : I have a phone to talk with others. Not for others to disturb me.


……….

Gorden’s House

Gorden’s wife enters the house angrily

Gorden’ wife: Where were you when it was seven.

Gorden : I was in the house.

Gorden’s wife : Did the phone ring or not?

Gorden : Yes, it was ringing

Gorden :Then Why didn’t you pick the phone ?

Gorden : Why should I ?

Gorden’s wife : I met with an accident and made a call

Gorden : How do I know ?

Gorden’s wife : When you don’t pick the phone and talk how can you know ?

Gorden : But I don’t pick the phone when it rings !

May 4, 2009

இங்கே

அந்த காலத்தில் 1972ல் எம்ஜியார் மதுரை தி .மு .க மாநாட்டில் பேசும்போது 'அலை ஓசை' பத்திரிக்கையை தூக்கிப்போட்டு ' ராணுவத்தையே சந்திக்க தயார் ' என ஆவேசமாக சொன்ன விஷயம் பெரிய நகைச்சுவை யாக பின்னால் அவர் கொஞ்ச காலத்திலேயே அண்ணா தி முக ஆரம்பித்து விட்ட நிலையில் , அதன் பின் அவர் சில வருடங்களில் முதல்வர் ஆன போது' தபால் கார்டு விலை குறைப்பேன்' என்று சொன்ன போது , இப்படி அவர் துக்ளக் சேட்டைகளாக பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டதுண்டு.
இப்போது கோவையை ஒட்டி ராணுவத்தோடு பெரியார் தி க , ம தி மு க கட்சியினர் மோதி ராணுவத்தினரை அடித்து , ராணுவ வாகனங்களை சூறையாடி பெரிய யுத்தம் நடத்தி காட்டி விட்டனர் . பதிலுக்கு ராணுவத்தினர் சிலர் அந்த இடத்திற்கு வந்து பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர் . பெ.தி .க ., ம தி முக வினர் பலர் மீதும் ,ராணுவத்தினர் சிலர் மீதும் போலீஸ வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
...
'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது . பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம் . You should look gracefully oldஎன்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது . நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை , நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார் .
பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண் . இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி . இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார் .
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர் . நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி . இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி . படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக ,பலே பாண்டியா வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர்தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது .
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக , வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக ,ஸ்பஷ்டமாக இருக்கும்.
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர் . ஜெமினி -சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி .
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா . வந்தா உடனே சிக்னல் கொடு "
வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி .
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது !
" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் "
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம் . குல பெண்ணோடு பிறந்தது நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும் . முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும் )பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார் . அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது . அவர் சொன்னது கூட மிகை இல்லை . அவருடைய அண்ணனை இழந்து விட்டார் .
பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு .யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ? சொல்லுங்கள் !


...
தமிழ் நாட்டில் கூட நிறைய கோடீஸ்வரர்கள். வேட்பாளர்களில்!கம்யூனிஸ்ட் தென்காசி பொ.லிங்கம் போல ஒன்றிரெண்டு ஏழைகளும் வேட்பாளர்களில் உண்டு தான்.

May 2, 2009

Carnal Thoughts-20



காமத்தின் நிமித்தம்
பெண் ஆணாலும், ஆண் பெண்ணாலும்
ஒவ்வொரு தனிநபரும் அனுபவப்படுகிற
துயரம், நிராசை, ஏக்கம், கிளர்ச்சி, களிப்பு, மகிழ்ச்சி, பிரிவாற்றாமை போன்றவற்றை பதியும் எந்த படைப்பிலும் , எழுத்தில் வரும்போது இந்த உணர்வுகளின் உக்கிரமான தீர்க்க ஆதாரம் சிறுத்துப்போய் விடும் .
ரொம்பவும் அன்யோன்யமான வர்ணிப்பு விபரம் 'சௌந்தர்யலஹரி'யில் உண்டு.
‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி '
காமம் என்னும் சிருங்காரத்தை தி.ஜானகிராமன் சங்கீதமாக்கிய 'மோகமுள் 'ரஸவாதமும் இங்கே நடந்திருக்கிறது.
ஜி. நாகராஜனின் பரத்தமை காதல், நுட்பமாக இந்த மண்ணில்தான் 'குறத்தி முடுக்கு ' என விரிந்திருக்கிறது.
சாரு நிவேதிதா வின் 'ஜீரோ டிகிரி ' கொடுத்த பேரதிர்ச்சி !
தமிழ் உரைநடை இலக்கியத்தில் கு.ப.ரா., தி.ஜா., கரிச்சான் குஞ்சு ,கி.ரா., ஜி.நாகராஜன், ஆதவன், சம்பத், சாரு நிவேதிதா போன்ற அற்புதக் கலைஞர்கள் இந்தக் காமம் என்னும் தன்னியல்பை நேருக்கு நேர் காணத் துணிந்தவர்கள்.

கலாப்ரியா எழுதிய ஒரு கவிதை ‘அவள் அழகாயில்லாததால் எனக்குத் தங்கையாகி விட்டாள்’ என்பதாக வரும். இதன் உளவியல்கூடக் காமம்தான். காமத்தின் சந்தர்ப்பவாதத்தை அழகாகச் சொன்ன கவிதை.
‘அந்தக் கறுப்பு வளையல்காரி குனிந்து நிமிர்ந்து பெருக்கிப் போனாள். அறை சுத்தமாச்சு. மனசு குப்பையாச்சு’, என்று இந்நாய் சிறுவேட்கையைப் பற்றித்தான் கல்யாண்ஜி எழுதினார்.
கல்யாண்ஜியின் இன்னொரு கவிதையில்
பெண்மனம், ‘நான் பழுத்திருக்கும் போது வராமல் உளுத்துப்போனபின் புழுக்கொத்த வரும் மனம் கொத்தி நீ’ என்று விம்மும் !
ஒரு இஸ்லாமியக் கவி பரந்த மனதோடு மிகுந்த அடக்கத்தோடு பாடினான் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’ என்று!
'மனித சிந்தனையின் நவீன பகுதியின் மஹா கவிஞன்' என்று சுட்டிக்காட்டப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸ் தன்னுடைய ‘A Painful Case’என்ற சிறுகதையில் நூறு வருடங்களுக்கு முன்னரே ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வெறும் சிநேகிதம் மட்டும் என்பது இயல்பில்லாதது. ஏனெனில் உடல் உறவு என்பது அங்கு தவிர்க்க முடியாத விஷயம்’ என்று எழுதினார்.
ந.பிச்சமூர்த்தி சொல்கிறார், ‘கேட்பதல்ல காதல், தருவதுதான்’ என்று.
க்ளியோபாட்ரா தன் வாழ்வில் ஜூலியஸ் சீசர் உடன் முன்னர் கொண்டிருந்த உறவின் தன்மை எத்தகையது என்பதை ஆண்டனி அண்ட் க்ளியோபாட்ரா நாடகத்தில் விவரிக்கிறாள் .
My salad days!
When I was green in judgement
And cold in blood!

ஜூலியஸ் சீசர் இவள் மீது செய்தது பாலியல் வன்முறை.
சீசர் இவளுடன் உடலுறவு கொண்டபோது அவள் வயதுக்கு வராதவள். மனமும் பால்மனம் அப்போது.
க்ளியோபாட்ரா காதலுக்கோ காமத்துக்கோ பக்குவமில்லாத பச்சிளம் சிறுமி.
ஷேக்ஸ்பியர்!