Share

Dec 12, 2008

இரண்டு பெங்களூரு செய்திகள்

பெங்களூர் செய்தி ஒன்று :
பெங்களுர் பெண் பல் டாக்டர் ஒரு மைசூர் ஆண் டாக்டர் தன்னை காதலித்து துரோகம் செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதை அறிந்து பல்லை நறநற என்று கடித்து ,பின் நிதானித்து .. அந்த மைசூர் பல் டாக்டரை நயந்து வரவழைத்து ஜூஸில் மயக்கமருந்து கலந்து அவரை குடிக்க செய்து அந்த மைசூர் பல் டாக்டரின் கல்யாண சாமானை சும்மா 'சுட சுட' மைசூர் பாக்கு கட் பண்ணுற மாதிரி வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார் . இப்போது பதுங்கி திரிந்த பெண் பல் டாக்டர் போலீசிடம் மாட்டி கொண்டார் . டணால் தங்கவேலு "தேன் நிலவு" படத்திலே சொல்றாப்பிலே
' பதுங்குனாருள்ள, அப்புறம் ஏன் திரியிறாரு ? அதான் மாட்டிகிட்டாரு !'


பெங்களுர் செய்தி இரண்டு :
தேவ கௌடாவின் மத சார்பற்ற ஜனதா சென்ற ஆட்சியில் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த அபத்தத்தை தொடர்ந்து பல கூத்து நடந்து முடிந்து இப்போது பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும்போது நடக்கும் ஒரு இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஜனதா வேட்பாளர் தேட அவகாசம் இல்லாத தர்மசங்கடத்தில் அவசரமாக வேறு வழியில்லாமல் தன் மருமகளையே வேட்பாளராக அறிவிக்க வேண்டி வந்திருப்பதற்காக மிகவும் மனம் வருந்தி வேதனைபட்டிருக்கிறார் என்று தினமலர் ' டவுட் தனபாலு ' பகுதியில் படிக்க கிடைத்தது .


ம்ஹூம் ..உங்களுக்கும் கஷ்டம் வருது , எனக்கும் கஷ்டம் வருது . யாருக்கு தான் கஷ்டம் வரலே சொல்லுங்க ..எல்லோருக்கும் கஷ்டம். ஆனா தேவ கௌடா கஷ்டம் வெளியே தெரியுது .. என்ன செய்ய .. சரி பார்ப்போம் .தெய்வத்துக்கு எல்லாம் கண்ணு தான் இல்லையே !

1 comment:

  1. முதல் செய்தி சரியான காமெடி!

    பெண்களை போக பொருளாக நினைப்பவர்களின் ”அதை” வெட்டினால் தவறில்லை என்று தான் தோன்றுகிறது

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.