Share

Nov 16, 2008

“Dr.Brodie’s Report”

போர்ஹே எழுதிய கதை “Dr.Brodie’s Report”
எஸ் ராமகிருஷ்ணனின் ' பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' அருமையான சிறுகதை . அதை படிக்கும் போது போர்ஹே யின் டாக்டர் ப்ராடி யின் அறிக்கை கதை ஞாபகம் வந்தது. உடனே நான் எஸ் ராமகிருஷ்ணன் கதை காப்பி என சொல்வதாக நினைக்கவேண்டாம் . Inspiration ஆக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் . ஒரு நல்ல கதையை படிக்கையில் இன்னொரு கதை ஞாபகம் வருவது இயல்பானது .ஏனென்றால் எஸ் ரா வின் கதை உலகத்தரமானது . அற்புதமானது. உயிர்மையில் சென்ற ஆண்டு வெளி வந்த 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' படிக்காதவர்கள் அவசியம் படிக்கவேண்டும் .

“Dr.Brodie’s Report” கதையில் வரும் யாஹூ இன பழங்குடி மக்கள் பழங்குடிக்கே உரிய நம்பிக்கை பல கொண்டவர்கள் .
பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால் யாரையும் கடல் ஆமைகளாக , எறும்புகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் .யாஹூக்கள் உறுதியாக நம்பினார்கள் .
இதை பிராடி நம்ப மறுக்கும் போது ஒருவன்உடனே பரபரப்பாக தேடி அவருக்கு ஒரு எறும்பு புற்றை காட்டுவான். ஏதோ அது தான் பிராடி நம்புவதற்கு ஆதாரம் நிரூபணம் என்பதாக !

போர்ஹே சொற்ப கதைகள் தான் எழுதினார் .ஒரு 24,25 கதைகள் இருக்கலாம் .பெரும்பாலும் பேச்சில் தான் காலத்தை வீணடித்தார் . ஆனால் போர்ஹே யின் எழுத்து சாதனை பற்றி பேசிகொண்டே இருக்கலாம் .போர்ஹே பற்றி எழுதிகொண்டே இருக்கலாம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.