Share

Nov 19, 2008

பெருவங்கியம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெருவங்கியம் என்று ஒரு வாத்தியத்திற்கு பெயர் .
அது தான் நாகஸ்வரம் !
நாகஸ்வரம் ,தவில் இரண்டும் ராட்சச வாத்தியம் .அசாத்திய திறமை யுடன் கையாளவேண்டிய இசைக்கருவிகள் . அனைத்து இசைக்கருவிகளையும் கையாண்ட பிராம்மணர்கள் இதை கேட்டு ரசிக்க மட்டும் செய்தார்கள் . இசை வேளாளர்கள் தான் நாகஸ்வரம் மீது கண் வைத்தார்கள் . காருகுறிச்சி தெற்கே பிறந்த பூ கட்டுகிற பண்டார ஜாதி . ஸ்ரீ ரங்கம் ஷேக் சின்ன மௌலானா முஸ்லீம் . இவர் வீட்டில் இந்து தெய்வங்களின் படங்கள் இருக்கும் .
இளைய ராஜா ஒரு முறை சொன்னார் 'திரைஇசைக்குழுவில் 81இசைக்கருவிகள் உண்டு . ஆனால் அவற்றில் ஒன்று கூட நாகஸ்வரத்துக்கு ஈடாகாது .'
ஷெனாய் பிஷ்மில்லா கான் நாகஸ்வரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் . நாகஸ்வரத்தில் வாசிக்கக்கூடிய பல ராகங்கள் , சங்கதிகள் ஷெனாய் யில் வாசிக்கவே முடியாது என சொல்வார் .
காரு குறிச்சியின் சகானா வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது .

நாகஸ்வர மேதை திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை 80வயது வரை வாழ்ந்தவர் . அவரது தொண்ணூறாவது வயது நினைவு நாள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது , செம்மங்குடி பேசினார் .
" நான் திருவிடை மருதூரில் குருகுலத்தில் இருந்த போது முதல் முதலாக திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களை பார்த்தேன் . அப்போது அவருககு ஒரு 16,17 வயதிருக்கும் . ஆண் மோகினி போல் இருப்பார் !"
.........

ஒரு விஷயம் .
நாகஸ்வரம் வாசிப்பவர் முன் நின்று ஊறுகாய் சாப்பிடக்கூடாது .வித்வான் அப்புறம் ரொம்ப சிரமப்படுவார் . சாமி புறப்பாடு ,கல்யாண வீடுகளில் சில குறும்புக்கார சிறுவர்கள் நாகஸ்வர வித்வான் வாசிக்கும் போது அவர் முன் ஊறுகாய் பாக்கெட்டை சப்பிகொண்டு நிற்பார்கள் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.