Share

Nov 14, 2008

நிகோஸ் கசான்சாகிஸ்

1957ல் அல்பெர்காம்யு நோபெல் பரிசு வாங்கினார் . ஒரு வோட்டு வித்தியாசத்தில் அவரிடம் நோபெல் பரிசை இழந்தவர் நிகோஸ் கசான்சாகிஸ்
( Nikos Kazantzakis) அப்போது அல்பெர் காம்யு பெருந்தன்மையுடன் சொன்னார் .
" என்னை விட கசான்சாகிஸ் இந்த நோபெல் விருதுக்கு நூறு மடங்கு தகுதியானவர் " அந்த வருடமே கசான்சாகிஸ் இறந்து விட்டார் .

கசான்சாகிஸ் பிறகு ஏழு வருடம் கழித்து 1964 ல் அவருடைய நாவல் Zorba the Greekதிரைப்படமாக வெளிவந்த போது தான் உலகிற்கு அவரை அடையாளம் தெரிந்தது .
சோர்பாவாக அந்தோணி குயின் பட்டையை கிளப்பியிருந்தார் .
நாவல் பற்றி ....
பண்டிதன் ஒருவன் தன் படிப்பெல்லாம் சோர்பா வின் யதார்த்த சந்தோஷ வாழ்வின் முன் துச்சமென்று உணர்வான் .சொத்து , புலமை அனைத்தையும் துச்சமாக்கிய படைப்பு சோர்பா த கிரீக்
The virtue of possessing nothing!
சோர்பா படத்தில் பார்த்தாலும் நாவலில் படித்தாலும் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத கதா பாத்திரம் . கதா பாத்திரம் என்று சொல்வது கூட குறைவான வார்த்தை . நம்மோடு அவன் வாழ்ந்து கொண்டே இருப்பான் .
சோர்பா சொல்வான் கதைசொல்லியிடம் . ஆம் கதைசொல்லி தான் தான் அந்த பண்டிதன் .
" பகல் நேரம் என்பது ஒரு ஆண் . இரவு தான் பெண் !"
அதீத யதார்த்தமாக ஷோர்பா பேசுவான் . புராணிகம் , மர்மம் ,கனவு கலந்து ..
" என்னுடைய தாத்தா வெள்ளை தாடியுடன் ரப்பர் பூட்ஸ் போட்டுகொண்டிருப்பார் . ஒரு நாள் எங்கள் வீட்டு கூரை மேலிருந்து குதித்தார் .அவருடைய பாதம் தரையில் பட்டவுடன் பந்து போல எகிறி வீட்டை விட உயரத்திற்கு தாவினார் .மேலும் மேலும் வான் நோக்கி உயர உயர மேலெழுந்து மேகத்திற்குள் சென்று மேகங்களுக்கிடையில் மறைந்தே போனார். இப்படித்தான் என் தாத்தா இறந்தார் "
தன் தாம்பத்தியம் பற்றி ஷோர்பா சொல்வது
"ஒரு முறை நேர்மையாக சம்பிரதாய திருமணம் .அப்புறம் பாதி நேர்மையுடன் இரண்டு திருமணங்கள் ! இவை மிகவும் சீரியஸ் ஆனவை தான் . அப்புறம் ஒரு ஆயிரம் முறை கந்தர்வ திருமணங்கள் கொஞ்சமும் நேர்மையில்லாமல் !"
அவனுடைய ஒவ்வொரு பெண்ணுடனான சரீர சம்பந்தத்தையும் கல்யாணம் என்றே ஷோர்பா குறிப்பிடுகிறான் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.