Share

Nov 22, 2008

எஸ் ராஜம் ,எஸ் பாலச்சந்தர் பற்றி நாகார்ஜுனன்

'எஸ் பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்' என்ற

R P ராஜநாயஹம் பதிவு பற்றி

நாகார்ஜுனன் said...


முன்னாள் மைலாப்பூர் வாசி என்ற முறையில் என்னிடமிருந்து சில -

எஸ். ராஜம் அபூர்வ ராகங்களில் ஸ்பெஷலிஸ்ட். மேளகர்த்தா வரிசையில் அடிக்கடி பாடப்பெறாத 31-36, 67-72 ராகங்களை இவர் பாடியதை வைத்தான் கற்கிறார்கள். இவர் அந்தக்காலத்தில் வானொலியில் பணியாற்றியபோது பாடியவை.இன்னொரு விஷயம், அபாரமான ஓவியர். பல ஆண்டுகளாகக் காவிதான் அணிகிறார். மைலாப்பூர், லஸ் புத்தகக்கடைகளில் அடிக்கடி பார்க்கலாம். சகஜமாகப்பேசுவார்.

என் தந்தையாரும் எஸ். பாலச்சந்தரும் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் சகாக்கள். எஸ். பாலச்சந்தர் கஞ்சிரா அநாயாசமாக வாசிப்பார். இவர் அப்போதே நாடகங்களில் நடித்தவர் என்று என் தந்தையார் சொல்கிறார்.

நாகார்ஜுனன்
Saturday, 22 November, 2008

1 comment:

  1. see the write-ups on S.Balachandar and his films in dhool.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.