Share

Nov 24, 2008

ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .



ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார் .
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார் .
ஏரோப்ளேன் ஓட்டுவார் !

இன்றைக்கு வரும் நடிகர்கள் தகுதி என்ன ?

ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம் .
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன் .
சந்திரலேகா(1948) வில் வில்லன் .
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார் .
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார் .

பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார் .அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார் .

இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !

நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில்ரஞ்சன் பேசும் ஒரு வசனம் -
" நீ சொல்றது எப்படி தெரியுமா இருக்கு ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு ! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு !"

காதல் வசனம் !!

3 comments:

  1. ரஞ்சனின் இயற்பெயர் வெங்கடரமண சர்மா என நினைக்கிறேன்.
    மங்கம்மா சபதம் படத்தில் வசுந்துரா தேவியிடம் டீ கொடு என்று வில்லத்தனம் செய்வார். சந்திரலேகாவில் எம்.கே.ராதாவுடன் போடும் கத்தி சண்டை போல எந்த படத்திலும் நான் பார்க்கவில்லை. ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் ஹிந்தியில் நிஷான் என்று எடுத்தபோது எம்.கே.ராதா நடித்த இரட்டை வேடத்தில் ரஞ்சன் நடித்தார். அவர் எனக்கு பிடித்த வில்லன். நீங்கள் சொன்னீர்களே 60+ களை கேட்க வேண்டும் என்று. நான் 67.
    சகாதேவன்

    ReplyDelete
  2. நடனத்துக்காக ஒரு மாதப்பத்திரிகையும் நடத்தி அதன் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

    He was a no-nonsense man and Jack of all trades!

    பாரதி மணி

    ReplyDelete
  3. Today's actors are also equally talented, or more. Vijay can shake his head and neck at the same time while his limbs shake in opposite directions. Quite a feat! Ajith can say 'Adhu' in different modulations in the same scene!Arjun just raises his little finger to send 50 thugs airborne and fall 200 feet away!Just an angry look of our Super Star is enough to kill all his enemies at one stroke! The list is endless!!!

    N.Ramakrishnan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.