Share

Nov 23, 2008

செம்பை


செம்பை வைத்யநாத பாகவதர் வாய்ப்பாட்டு அவருடைய Contemporaries மதுரை மணி ஐயர் , ஜி என் பி , அரியக்குடி ,செம்மங்குடி,முசிறி ஆகியோருடன் ஒப்பிட்டால் ரொம்ப கீழே , அவ்வளவு ஏன் இவரை அவர்களோடு ஒப்பிடவே கூடாது . அது மற்றவர்களை கௌரவப்படுத்தாது! கே.ஜெ.யேசுதாஸ் இவருடைய மாணவர் . செம்பையிடம் பெரிய விஷேசத்வம் கிடையாது .வயலின் வாசிக்க தெரிந்தவர் . ஆனால் 'கதன குதூகலம் ' ராகம் ரகு வம்ச சுதா ' பாடல் எங்கே கேட்க வாய்த்தாலும் இவர் ஞாபகம் தான் வரும் .


1966 ஆண்டு
செம்பை வைத்யநாத பாகவதர் ஜிப்பா , வேட்டி ,அங்கவஷ்தரம் அணிந்த நிலையில் கச்சேரி செய்தார் .
அடுத்த 1967 ஆண்டில் செம்பை ஜிப்பா ,வேட்டி அணிந்து கச்சேரி செய்தார் .
1968 - செம்பை கச்சேரி வேட்டி , மேலே அங்க வஸ்த்திரம் மட்டும் . ஜிப்பா மைனஸ் .
1969 … செம்பை கச்சேரிகளில் வெறும் வேட்டி மட்டுமே !

எதிர்கால 1970 செம்பை கச்சேரி பற்றி ரசிகபெருமக்களுக்கு ஒரு பதற்றம் , பயம் , எதிர்ப்பார்ப்பு ,தவிப்பு கூடி விட்டது ! எல்லோரும் நகத்தை கடித்து கொண்டு ..படபடப்புடன் !!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.