Share

Nov 21, 2008

முயலின் பார்வையில்

ரொம்ப வருடம் முன் கணையாழியில் படித்த தத்துவ கதை !
ஒரு ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார் . அதில் துரு துரு முயல் ஒன்றை ஒரு விதமாக பழக்குகிறார் . அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும் .உடனே இவர் ஒரு காரட் அதற்கு தருவார் . வீட்டில் விருந்தாளி யாராவது வரும்போது அவர்களுக்கு தன் கொல்லையில் வளர்க்கப்படும் முயல்களை காட்டும்போது இந்த குறிப்பிட்ட முயலை கூப்பிட்டு அது இவர் முன் மூன்று குட்டிகரணம் போடுவதை காட்டி விருந்தாளிகள் ஆச்சரியப்ப்படும்போதே குட்டிகரணத்திற்கு ஊக்க போனசாக காரட் கொடுப்பார் .
அந்த முயல் தன் சக முயல்களிடம் சொன்னதாம் " இந்த ஆள் ரொம்ப தமாசான ஆள் . வேடிக்கையை பார் . நான் இப்போ குட்டிகரணம் போடுறேன் .இவன் ஓடி வந்து காரட் கொடுப்பான் பார்."
மூன்று குட்டிகரணம் போட்டது முயல் . ஓடி வந்து அவர் காரட் கொடுத்தார் . ஏனைய முயல்கள் அந்த ஆள் செய்யும் சர்க்கஸை மிகவும் ரசித்து மகிழ்வது வழக்கமாகியது .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.