Share

Nov 19, 2008

ராகங்கள் மீதான நம்பிக்கைகள் !

ஆஹிர் ராகம் அன்னலக்ஷ்மிக்கு ஆகாத ராகம் . இதை பாடினால் போஜனம் கிடைக்காது என்று பூர்வ கால நம்பிக்கை .
ரஞ்சனி ராகத்தில் பாடினால் குஷ்டம் வரும் . ஆனால் அந்த காலத்தில் ஆணழகன் ஜி என் பி பயப்படாமல் தியாகையரின் துர்மார்கச்சரா அனுபவித்து பாடுவார் .
வராளி ராகம் குருகுல முறையில் பயிலக்கூடாது . குரு சிஷ்ய உறவு முறிந்து விடுமாம் . கா வா வா ...
அமிர்த வர்ஷினி ராகம் பாடினால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .
உண்மையென்றால் வானம் பார்த்த கரிசல் பூமியை எல்லாம் விளாத்திகுளம் சுவாமிகள் நஞ்சை நிலமாக்கிஇருப்பார் . கரிசல் கதைகள் என்று தமிழ் இலக்கியம் பார்த்திருக்காது .
ஹிந்தோளம் ராகம் நெஞ்சு வலிக்கு நல்லது . ஆனந்த பைரவி ராகம் ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் .பைரவி மரணப்படுக்கையில் இருப்பவரையும் எழுப்பி விடும் .

You can see a LIE in between Every BeLIEf

1 comment:

  1. Hi RPR,
    I don't mean to sound like a prick or something, but you've got the sentence wrong there. It should be 'There is a lie in every belief'. You should use the term 'between' only when you want to compare two things. Say for example - 'The fight between Tyson and Louis was awesome'.

    Thanks
    Krishnan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.