Share

Nov 16, 2008

திருப்பாவை உற்சவத்தில் வியாக்யானங்கள்

ஆண்டாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் ஆண்டு தோறும் நடக்கும் . வியாக்யானம் ,கச்சேரி அமர்க்களப்படும் . கல்யாணபுரம் ஆராவமுது அய்யங்கார்தான் மேற்பார்வை .

வ்யாக்யானங்களில் கேட்ட விஷயம் இரண்டு கீழே ;

"வசுதேவர் எட்டாவது குழந்தை கிருஷ்ணனை சிறையிலிருந்து தூக்கி கொண்டு தலையில் ஒரு கூடை யில் வைத்துதுணியால் மூடி யமுனை நதி வழியாக பிருந்தாவனத்திற்கு நந்தகோபன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார் . நல்ல மழை .வசு தேவர் மிரண்டு விடுகிறார் . கூடையின் மேல் தன் கைகளையும் காபந்தாக வைத்துகொள்கிறார் .மழை மேலும் மேலும் வழுக்கிறது . இவருடைய கழுத்து வரை வெள்ளம் . யமுனையை தாண்டிய நிலையில் கழுத்து வரை வெள்ளம் . இன்னும் பெய்தால் குழந்தை கதி என்னாவது .'பகவானே 'என்று கதறுகிறார் . உடனே குழந்தை கிருஷ்ணன் தன் பாதங்களை துணிக்கு வெளியே கூடையில் நீட்டுகிறான் .' அப்பாடா பாத தரிசனம் கிடைத்து விட்டது !திருப்தி !!' என்று மழை உடனே நின்று விடுகிறது.வெள்ளம் வடிந்து விடுகிறது . குழந்தை பாத தரிசனத்திற்கு வேண்டி தான் மழை கிடந்து தவித்து பொழிந்திருக்கிறது.வெள்ளமும் தவித்திருகிறது "

......

இளைஞன் கிருஷ்ணன் தனித்து நடந்து செல்கிறான். இந்த பிறவியில் அவன் சாதிக்க வேண்டியவை பற்றிய தியானத்துடன் . Angels whisper to a Man when he goes for a walk!

வழியில் ஒரு அபூர்வ அனுபவம் ! அனுமார் தான் சிரஞ்சீவி ஆயிற்றே ! வழியில் பழைய நினைவுகளில் மூழ்கிய நிலையில் அவர் நடந்து வந்து கொண்டிருக்கிறார் . கிருஷ்ணனுக்கு தன் சென்ற பிறவியின் உத்தம தொண்டனை ,அனுமானை பார்த்தவுடன் சிரிப்பு.. அவரிடம் " என்னை கும்பிடு .வணங்கு " என்று சொல்கிறார் . " நான் எதற்கு உம்மை தொழவேண்டும் ." அனுமார் திருப்பி கேட்கிறார் .

'என்ன? என்னை தெரியவில்லையா !'

'கொஞ்சம் தெரிந்த ஆள் போல் தான் தெரிகிறது . ஆனால் உம்மை கும்பிட வேண்டும் என்று நீர் சொல்வது தான் எனக்கு அபத்தமாக தோன்றுகிறது .கும்பிட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை '

கிருஷ்ணர் பரவசத்துடன் ' நான் தான் சென்ற யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திரன் ! உன் அருமை தலைவனாக அப்போது ராமனாக அவதரித்தவன் !!'

அனுமார் கேட்டாராம் " நீர் தான் என் ஸ்ரீ ராமன் என்றால் வில் எங்கே ? ஜடை எங்கே ?"

மறந்தும் புறம் தொழாத அனுமன் !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.