Share

Nov 26, 2008

பட்ட மரம்


அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.