Share

Nov 1, 2008

முரசொலி மாறன்

சினிமாவில் சம்பந்தப்பட்ட யாரும் வேறு துறை போனாலும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டாயம் பேசுவார் . எழுதுவார் . யாரும் இதற்கு விதிவிலக்கல்ல .கருணாநிதி அரசியலில் எவ்வளவு பிசி யானாலும் அவ்வப்போது நாற்பதுகளில் இருந்து தன் அனுபவங்களை பேசி எழுதி வருவார் . சுவையான திரை சம்பவங்களை கூறுவார்.ஆனால் ஒரு அபூர்வமான அதிசயம் முரசொலி மாறன் ! நிறைய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் . படங்களை தயாரித்துள்ளார் . இயக்கியுள்ளார் .' வாலிப விருந்து ' படம் அவர் இயக்கத்தில் வந்தது தானே ! ஆனால் அவர் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின் தமிழ் சினிமா அனுபவங்கள் பற்றி பேசியதே கிடையாது . எழுதியது கிடையாது .அவர் முழு நேர அரசியல்வாதியானதும் , டெல்லி அரசியலில் பல முறை மத்திய அமைச்சர் ஆனதும் ' அந்த காலத்திலே அந்த படத்துக்கு வசனம் எழுதும் போது .... அந்த படத்தை நான் இயக்கிய போது ' - இப்படி ஒரு வார்த்தை .. மூச் ...ம்ஹூம் ..

மனித சுபாவத்தில் இது ரொம்ப ரொம்ப அபூர்வமான விஷயம் .

3 comments:

  1. ஆமாம். நிறைய படிப்பாளி..சினிமாவில் இருந்தார் என்பதற்கான சுவடே இருக்காது. ஒருவேளை சினிமாத்துறையில் வெறுப்பாக இருக்குமோ என்றுகூட எண்ணத்தோன்றும்

    ReplyDelete
  2. எம்.ஜி.ஆர். நடித்த எங்கள் தங்கம் கூட இவர் இயக்கத்தில் வந்தது தானே? கலைஞர் பாசத்தையும் தாண்டி கடைசிவரை உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகராக வாழ்ந்து மடிந்தவர்.

    ReplyDelete
  3. இந்த தகவலே ஆச்சரியமாக உள்ளது...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.