Share

Aug 24, 2008

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைகள்

க.நா.சு க்கு 1.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதினேன் .அமரர் தி.ஜானகி ராமனை பற்றி அலட்சியமாக , முன்றில் பத்திரிகையில் சேறு தெளித்து எழுதிவிட்டார். அதற்கு பதிலாக ஒரு கோபமான rejoinder அவருடைய சென்னை விலாசம் , டெல்லி விலாசம் ,முன்றில் மற்றும் அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய பத்திரிகைகள் , புத்தக பதிப்பாளர்கள் ,எழுத்தாளர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிட்டி ,ஜெயந்தன் துவங்கி கோணங்கி வரை , மேலும் பேராசிரியர்கள் பலர், வாசகர்கள் ,என் நண்பர்கள் பலருக்கும் zerox நகல் நூறுக்கும் மேல் தபாலில் அனுப்பி வைத்தேன் .
16.12.1988 அன்று க.நா.சு இறந்துவிட்டார் .டெல்லி வானொலியில் காலை ஒலிபரபபில் தமிழ் செய்திகளில் கேட்டு அதிர்ந்து போனேன் .
க .நா. சு . நல்ல படைப்பாளி .அவருடைய பொய்த்தேவு ,ஒரு நாள் , அவருடைய முதல் நாவல் சர்மாவின் உயில் , அசுர கணம் ....சொக்க வைக்கும் படைப்புகள் . உண்மையில் "உரைநடை விறுவிறுப்பு" என்றால் முதலில் க . நா .சு அடுத்து தி. ஜா .. தொடர்ந்து சுஜாதா . இப்படித்தான் . அசோக மித்திரன் , சுந்தர ராம சாமி பிரத்யேக நடை தனி விஷேசம் . கி .ரா . எப்போதும் தனிக்காட்டு ராஜா ! இ.பா . சுஜாதாவுக்கே வாத்தியார் !
கொஞ்சம் தடம் புரண்ட திறனாய்வாளர் க .நா. சு .
பொய் சொல்வார் .தன் தந்தையிடம் இருந்து இந்த பொய் சொல்லும் பழக்கம் தன்னை தொற்றிகொண்டதாக அவரே எழுதியிருக்கிறார் .
இப்ப உள்ள வில்லன்கள் அவரை ரொம்ப நல்லவர் ஆக்கிவிட்டான்கள் !
க .நா. சு . மரண செய்தி ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார் ."
_________________________________
1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது . புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.
உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் .
" மரணபடுக்கையில் இருக்கும் கமலா விருத்தச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"
கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார் .
இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில் .
“My intentions are genuine. I don’t see the need to retaliate .”

4 comments:

  1. The Letter - would you please blog it here?

    ReplyDelete
  2. Ashok!
    you can see that letter, if my book "thazhal veeram" is published.
    But it's a herculian task, it seems!

    ReplyDelete
  3. You were voted to the front page at Tamilagam Congrats

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.