Share

Jul 23, 2008

தி.ஜா கட்டிய தாலி

19 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கடிதம்.டெல்லியிலிருந்து சாகேத ராமன் எழுதியிருந்தார் .தி . ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது . ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதி யும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார். Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான் . நான் உடனே "சான்சேஇல்லை . க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.

சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன் ." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார் .


இன்னொரு சம்பிரதாய மீறல்.
திருமதி தி.ஜா தன் கணவர் இறந்த பின் தாலியை கழுத்திலிருந்து கழட்டித்தர மறுத்து விட்டாராம் . "அவர் கொடுத்ததை நான் எதற்காக கழட்டி தரனும் . நான் மாட்டேன்" என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம். திருமதி தி.ஜா இறக்கும் வரை தன் தாலியோடு தான் இருந்தாராம்.

சாகேதராமன் இறந்த விஷயம் சிட்டி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது . சிட்டி இறந்து இப்போது இரண்டாண்டு ஆகி விட்டது .







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.