Share

Jul 18, 2008

எமர்சனும், மேற்கோள்களும்

எமர்சனை மேற்கோள் காட்டும் வழக்கம் எழுத்தாளர்களுக்கு தவிர்க்க முடியாத விஷயம் . ஆனால் எமர்சனுக்கு மேற்கோள்கள் பிடிக்காது .

" எனக்கு மேற்கோள்கள் பிடிக்காது . உனக்கு என்ன தெரியும் ? அதை எனக்கு சொல்." என்று நேரடியாக (மேற்கோள்களை தவிர்த்து) எண்ணத்தை வெளிப்படுத்த எமர்சன் வற்புறுத்துவார் .

" நிர்ப்பந்தம் ,விருப்பம் ,சந்தோஷம் காரணமாகவும் நாம் மேற்கோள்களை பயன்படுத்துகிறோம். " என்பார்!

"ஒவ்வொரு மனிதனுமே அவனுடைய மூதாதையர்களின் மேற்கோள் தான்" என்றும் சொல்கிறார் .

தமிழில் சுந்தர ராமசாமி எழுதும்போது மேற்கோள்களை தவிர்ப்பதை எப்போதும் பிரக்ஞையுடன் செய்துவந்தார் . மேற்கோள் காட்ட க்கூடாது என்பதை ஒரு நோக்கமாக கொண்டிருந்தார்.

எனக்கென்னமோ மேற்கோள் காட்டுவது தப்பான விஷயமாக தோன்றவில்லை.

என்னுடைய சொற்ப எழுத்துகளில் அவ்வப்போது சில மேற்கோள்களை காட்டியே வந்திருக்கிறேன் . சுந்தர ராமசாமியின் வாக்கியங்கள் உள் பட.

நான் மிகப் பொருத்தமாக சரியான இடத்தில் சரியான மேற்கோள்களை பொருத்துவதாக எழுத்தாளர்களும் , வாசகர்களும் பலமுறை என்னிடம் சிலாகித்து கூறியிருக்கிறார்கள்.

மேற்கோள்கள் என்பவை ஒரு எழுத்தின் சாரத்தை மேன்மைபடுத்துவதுடன் மேற்கோள்களுக்கு சொந்தக்காரர்களையும் கனப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.