Share

Jun 28, 2008

LOFTY SCENES

LOFTY SCENES!
- R.P.RAJANAYAHEM

UNSUNG UNHONOURED UNWEPT--GIANTS TURNED INTO PIGMIES--- CELEBRITIES TURNED INTO POOR CREATURES

Eknath Solkar, a forward short leg fielder in Indian cricket 30 years back in the 1970s is no more. With his poor educational qualification, he raised himself to a level as a player in Indian cricket team. He was one of the rare cricketers who took delight in being a fielder to chase and catch cricket balls. Bishen singh Bedi says " We would not have been the same bowlers without EKNATH SOLKAR. "It's an irony that he was a day drunkard even before he was dropped from the national team. By the time he breathed his last, Solkar weighed just 45 kgs and reduced to being a merebag of bones.

When this year began, in January, the glamour qeeen of the 1970's Parveen Babi's body was found in a Mumbai Martuary with a token as an unclaimed body No.16

Giants turned into pigmies!
Celebrities turned into poor creatures!!
Time is a cruel thing, indeed.


EVERY ACTION HAS A REACTION!

Vinod mehta wrote this in OUTLOOK june 20,2005.
I was appalled to read this peculiar news. let me give the message briefly.
Tony Blair,British Prime minister, a father of four grown-up kids declared in an interview " I am still SEXUALLY ACTIVE. I am a FIVE-TIMES-A-NIGHT MAN "
Miserably,One month after this interview,it was a pity to note, POMPOUS TONY BLAIR was admitted in hospital with a SEVERELY STRAINED BACK!!!

EVERY DELIBERATE, INTENTIONAL ACTION IS HAVING A REACTION.
YOU MUST REAP WHAT YOU HAVE SOWN.

WHO LOSES, WHO WINS. WHO IS IN WHO IS OUT

An ardent follower of Khomeini, AHMADINEJAD, The newly elected President of Iran had done a leading role in the occupation of the American Embassy in Tehran in the year 1979. This incident was the major cause of President Jimmy Carter's defeat by Ronald Reagan. It is obviously revealed that Reagan's employee had influenced the rebels against King Shah, not to free the embassy hostages until the election and as the protagonist of that operation, Ahmedinejad is reprehensible for the change in the American Presidential Order.
Now it is learnt, U.S is not pleased with the victory of Ahmedinejad. Was he a real King maker or not?

Who loses, who wins
Who is in and who is out.

ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM -
A REJOINDER TO OUTLOOK POLEMICS

When Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration.

Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great.

But this letter also raised a row among the libertarian writers(!) around Tamil nadu. Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ?
That's the question !

JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED

Heated discussions going on and now
ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS !
So this letter is being rejcted and ignored.

"How many ages hence
Shall this our'LOFTY SCENE'be acted over
In States unborn and accents yet unknown!"
- Shakespeare in Julius Caesar

--------------------------------------------------------------------------------

Pathivukal.COM - 2005

Jun 24, 2008

கலை நிலவு


‘ உங்கள் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதட்டுமா? ‘ என்று ஒரு சினிமா பத்திரிக்காசிரியர் ஜெமினி கணேசனிடம் கேட்டார். “நீ எதுக்குடா எழுதணும்? Even a Rickshaw Wala in the street corner knows my whole history “ – ஜெமினியின் பதில் இது!

தன்னுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜெமினி.

19 வயதில் பாப்ஜியைத் திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகு நடிகைகள் புஷ்பவல்லி, சாவித்திரி இருவருடனும் வாழ்ந்து குழந்தைகள் தந்தவர். பின்னும் ராஜஸ்ரீயோடு affair. 80 வயதில் ஜூலியானாவை மணந்து பிரிந்து இப்போது 85 வயதில் வாழ்க்கையின் சலிப்பைத் தாங்க முடியாமல் மூச்சை நிறுத்திக் கொண்டவர்.

1947இல் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் 1953ஆம் ஆண்டுதான் – தன்னுடைய 33 வயதில் – கதாநாயகனானார். அன்றைய பிரபல நடிகைகள் அனைவருடனும் நடித்தார். சாவித்திரி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி என்று எல்லோருக்கும் பொருந்துகிற மாதிரியான கதாநாயகன்.

நாடகப் பின்னணி கொண்டவர்களே சினிமாவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் அத்தகைய பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர். அன்றைய காலத்தில் நன்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த மிகச்சிலரில் ஒருவராக இவரைச் சொல்லலாம். அபாயமான காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். நடிகராவதற்கு முன்னரே, கல்லூரி மாடியிலிருந்து குதிப்பாராம். ‘ எப்படிக் குதித்தாய்? “ என்று பிரின்சிபால் பதறிக் கேட்டபோது மீண்டும் மாடியேறி குதித்து ‘இப்படித்தான்’ என்றாராம். புதுக்கோட்டை மகாராஜா இவர் தலையில் ஆப்பிளை வைத்துக் குறிபார்த்து ஆப்பிளைச் சுடும் பயிற்சிக்கு அடிக்கடி ஒத்துழைத்த தைரியசாலி.

சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர் இதைக் குறிப்பிட்டு ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார். ஆனாலும் தன்னை விடச் சாதாரண நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களில் கூட நடித்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் எம்.ஜி.ஆரிடமும் சிவாஜியிடமும் அவர்களது பிரம்மாண்ட இமேஜ் அவர்களுடைய மாறுபட்ட பாணியையும் மீறி மறைக்க முடியாத விஷயமாயிருந்தது. ஆனால் ஜெமினியால் சராசரி மனிதனை மிக இயல்பாகத் திரையில் காட்ட முடிந்தது. இன்று வாழ் நாள் சாதனை என்று எடை போட்டுப் பார்க்கும் போது எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடையதை விடச் சற்றுத் தூக்கலாகத் தெரிவது ஜெமினியின் அமெரிக்கையான சாதனை. ஆனால் அந்தக் காலத்தில் அவருடைய தகுதிக்கேற்ப புகழையும் மதிப்பையும் அவரால் பெற முடிந்ததில்லை.

சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என்று பல வகைப் படங்களைத் தந்தவர். எந்த அளவுக்கு ‘ கல்யாணப் பரிசு’, ‘சுமை தாங்கி’ என்று சோகமான படங்களில் நடித்தாரோ அதே அளவு ‘மிஸ்ஸியம்மா’, ‘யார் பையன்’ என்று நகைச்சுவைப் படங்களிலும் நடித்தவர் ஜெமினி. வண்ணப் படங்கள் என்று பார்த்தால் இவருடைய ‘சாந்தி நிலையம்’, ‘ சங்கமம்’ அந்தக் காலத்தின் மற்ற வண்ணப் படங்களை விட வண்ணத்தில் தரமானவை.

தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம். மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா ஆகியவர்கள். ‘கற்பகம்’ படத்தில் ஜெமினியின் நடிப்பை சிலாகித்து ரங்காராவ், “தம்புடு, you know I am a scene stealer. ஆனால் கற்பகத்தில் you have excelled me “ என்றாராம்.
‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக இவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.

ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் அவருக்காகப் பாடிய பாடல்கள், அவர் நடித்த படங்கள் ஆகியவை எப்போதும் இந்தக் காதல் மன்னனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் என்று சம்பிரதாயமாகச் சொல்ல வேண்டியிருக்கும்.
"KALACHUVADU "65 - - May 2005

.....................................................



R.P.Rajanayahem's father with Gemini Ganesan


உண்டிங்கு ஜாதி எனில்


புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்த கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா., நாடோடிக் கதைகள் பற்றிய ஒரு கருத்தரங்கை 1990ம் ஆண்டு நடத்தினார். நாடோடிக் கதைகளில் பாலியல் விஷயங்கள் தவிர்க்க முடியாதது. தமிழ்த்துறைப் பண்டிதர்களுக்கு எப்போதுமே சில மனத்தடைகள் உண்டு. கருத்தரங்கப்பொருள் எதுவாயினும் சரி ‘ தனித்தமிழ்’ , ‘ தமிழ்ப்பண்பாடு’ என்று தவிதவித்துப் போவார்கள். வட்டார வழக்கில் கி.ரா. எழுதுவதையே ஜீரணிக்க முடியாதவர்களை நாடோடிக் கதைக் கருத்தரங்கம் சிரமப்படுத்தாமல் இருக்குமா? ஒவ்வொரு கட்டுரை வாசிக்கப்படும்போதும் தமிழ் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்று யாரேனும் ஒரு புலவர் எழுந்து ஆட்சேபிக்கும்படியாகிவிட்டது.

பாளையங்கோட்டையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் லூர்து இந்தப் பண்டிதர்களின் புலம்பலுக்கு எதிர் வினையாகப் பேசும்போது ” கருத்தரங்கம் நாடோடிக் கதைகள் பற்றியது. விவாதம் இது குறித்து இருக்க வேண்டும். தயவுசெய்து தமிழ்ப் பண்பாடு பேசாதீர்கள். எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பிள்ளைமார் ஜாதி உண்டு. அந்த ஜாதியிலுள்ள ஆண் தன் அக்காள் மகளைத் தன் சகோதரியாகவே நினைக்கிறான். தாய் மாமன் என்பவன் அந்தச் ஜாதிப் பெண்ணுக்கு சகோதரன் முறை. அந்த ஜாதியில் ஒரு பெண் தன் மகளை தன் உடன் பிறந்தவன் பொறுப்பில் விட்டு விட்டு வெளியூருக்குக் கூடப் போய் வரமுடியும். தமிழ் நாட்டில் உள்ள எல்லாத் தமிழர்களும் அக்காள் மகளை முறைப் பெண்ணாக நினைக்கும் போது, எங்கள் ஊர்ப்பக்கம் உள்ள இந்தத் தமிழன் மட்டும் தன் அக்காள் மகளை தாய்க்கு சமமாக மதிக்கிறான். இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதுவும் தமிழ்ப் பண்பாடுதான் “ என்றார்.

உடனே ஒரு முதிய புலவர் மூச்சிறைக்க சிரமப்பட்டு தன் இருக்கையை விட்டு எழுந்து தள்ளாடி மேடைக்கு வந்து நடுங்கும் குரலில் கோபத்தோடு “ தமிழ்த் துறை நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டையே ஒருவன் பழிப்பானேயாகில் அவன் புதுவையை விட்டு உயிரோடு திரும்ப முடியாது “ என்று பிரச்சினையை திசைமாற்றி சவால் விட்டார்.

இந்த தமிழ் பண்டிதர்கள்! ALSATION DOGS BARK WITHIN THEIR OWN COMPOUND. பாரதியின் ‘ வீரமில்லா நாய்கள் ‘ என்ற வரி நினைவில் வருகிறது. கடவுள் பாரதியைப் படைத்தவுடன் விசுவாமித்திரன் தமிழ்ப் புலவர்களை படைத்திருக்கிறான் என்று ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று உண்டு.

நாட்டார் வழக்காற்றியல்துறைப் பேராசிரியர் லூர்து குறிப்பிட்ட அந்த ஜாதிதான் இல்லத்து பிள்ளைமார். ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் மட்டும் மற்ற ஜாதியினரிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்கு ‘ தாய்மாமன் உறவுமுறையே’ காரணம். இந்த எதிர் கலாச்சாரம் இல்லத்தாரை ஏனைய பிள்ளைமார்களிடமிருந்து மட்டுமல்ல தமிழகத்தின் பிற ஜாதியார்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. பிற ஜாதியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ளும்போது தவிர்க்க முடியாமல் ஒரு பண்பாட்டு அதிர்ச்சி ( CULTURAL SHOCK ) ஏற்படவே செய்கிறது. தேவர் சமூகத்தில் கொண்டையம் பட்டித் தேவமார் என்ற ஜாதியிலும் இல்லத்துப் பிள்ளைமார் போலவே தாய்மாமன் உறவு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இல்லத்துப் பிள்ளைமார் இனத்திற்கு இன்னொரு கலாச்சாரத் தனித்துவமும் உண்டு. தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களிலும் பரவலாய் உள்ள இனம். இங்கே உள்ளவர்களுக்கு தாய்மொழி தமிழ். கேரளாவில் இந்த இனத்தவருக்கு தாய்மொழி மலையாளம். மாறுபட்ட மொழிப்பண்பாட்டையும் மீறி இன்றும் திருமண சம்பந்தங்கள் நடக்கின்றன. நாஞ்சில் மனோகரனுக்கு பல வருடங்களுக்கு முன்னால் மலையாளி என்ற பிம்பம் அரசியல் ரீதியாகக் கூட ஏற்பட்டதற்கு இந்த IDENTY CRISIS தான் காரணம்.

இன்னொரு சுவாரசியமான செய்தி !

நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார். எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. ‘ சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும்பாழாயோ’ என்று பாடிய நம்மாழ்வார் இல்லத்துப் பிள்ளைமாரா? என்ற ஆச்சரியம் ஒருபுறம். எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்குஅருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என்னுடைய தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக பல நூற்றாண்டுகளுக்கு முன் நம்மாழ்வார் வம்சம் இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ ? என்று ஒரு பெருமித உணர்வு ஏற்பட்டுவிட்டது.

குரல்மணி (2001) மற்றும் தூறல் (2004) இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது

Jun 23, 2008

CHARU NIVEDITA'S O DEGREE IS NOT A PULP FICTION.

A rejoinder to Time of India
Dear Shalini,

I got a chance to read your review in Times of India on Blaft Publication's Anthology of Pulp Fiction. I was appalled to note that some words almost sounded like misguiding the reader as that 0 degree is a pulp fiction. But it is more than obvious that 0 degree is not a pulp fiction at all.

Madam, 0 degree is an alchemical novel from the beginning to end and is considered to be one of the greatest works of Literature.Every step of this novel shows much poetic qualities and I call 0 degree 'FROZEN MUSIC'.
It is very sad as Emerson says " To be great is to be misunderstood". I should agree that there is an optical illusion about every great masterpiece we read. Infact Charu Nivedita has created a microcosm of life,successfully preserving its complexity,its tension,liveliness and dynamism.He wrote this novel a century early and 0 degree is one of the landmark publications in the history of Literature.

I would like to bring to your kind notice Paul Zakaria's foreword to the Malayalam translation of 0 degree
" 0 degree is like an open experimental laboratory.Amidst the smoke, noxious vapours and beautiful imagery, high experienced and a wondrous journey."

Please note this remarkable and notable novel is placed now for four years in the syllabus for PG course students in Kottayam Mahatma Gandhi University.

When this novel was first published in Tamil ten years back, there was a hue and cry to ban this book. But it is the height of irony that the rulers and intelligentsia are insensitive and incapable of either appreciating or banning this work of art.

More over as there is a torture scene in which National Anthem is used in a police station,the so called national patriots are making hallabaloo and are against this remarkable novel even now.

I humbly request you not to disillusion the literary significance of 0 degree,extremely contraversial in both its subject matter and its use of often 'OBSCENE' language.

Kind regards,

R.P.Rajanayahem

The above email was sent to the editor of Time of India on 19 th June, 2008.

Jun 20, 2008

HERE IS THE RUB!

 
Criminals are Creative Artists என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல.' என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.' என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
பின்னரும் திண்ணையில் நடந்த காரசார விவாதத்தில் காலச்சுவடு கண்ணன் ஜெயமோகனின் அவதூறுகளுக்கு பதிலளித்தபோது 'ஜெயமோகனுக்கும் ராஜநாயஹத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம் இருக்கும். எனக்கும் ராஜநாயஹத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால் அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்பமுடியுமா? இது அவருக்கு நான் விடும் சவால், என்று குறிப்பிட்டு 'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்' நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.

திண்ணையின் போலி ஜனநாயகத்தை சாடியிருந்த கண்ணன் தன் விவாதத்தில், திண்ணை ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி செய்திருந்த கட்டைப் பஞ்சாயத்து பற்றி பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக "நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்" என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது என்று வேதனையுடன் அப்போதே குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கண்ட விஷயங்கள் யாவற்றையும் திண்ணை இணைய இதழில் 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ கட்டுரையை பன்முகத்துக்கு அனுப்பிய பின்னர் தான் படித்தறிந்து கொண்டேன். 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ பன்முகம் இதழில் வெளியாவதற்கு இரண்டு வாரம் முன்னதாக கனடாவிலிருந்து நடத்தப்படும் இணைய இதழ் பதிவுகள்.காம் ஜனவரி இதழில் லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதாக இலக்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்திருந்தார்கள் ஜனவரி பன்முகம் இதழ் வெளி வந்தபின் தான் நான் அதை பார்த்தேன். யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசூரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசூரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. "இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி? 'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைசர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்."

யப்பா பைரவா! நீ யாரு பெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக் காசுத் திருடன்தான் நான்' என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்' என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub

'2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா' என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஒரு இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது" என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்' கட்டுரை 'பன்முகம் இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.
தமிழ் இலக்கிய உலகுக்கு நான் ஒரு தலைசிறந்த நகைச்சுவை கட்டுரை ஒன்றை விமர்சனம் என்ற சிங்காதனத்தில் ஏறி நின்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும் விமர்சகராக எப்போது தான் ஆவது? நாச்சார் மட விவகாரம் கதை வெளியான அதே சொல்புதிது 11வது இதழில் 'என்ன ஆயிற்று இந்த எழுத்தாளர்களுக்கு?' (உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடுக்கச் சொல்லு) என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. சொல்புதிது 9வது இதழில் 'அருண் மொழி நங்கை எழுபத்தெட்டு கம்பைன்ஸ் ஊழல்' இப்போது நாறியிருக்கிற நிலையில் இந்த 'என்ன ஆச்சு இந்த எழுத்தாளர்களுக்கு' என்ற அருண்மொழி நங்கையின் கட்டுரையைப் படித்துப்பார்க்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, விலா எலும்பு பிசகிவிடுமோ என்ற பயமே ஏற்பட்டுவிட்டது எனக்கு. எழுத்தாளர்களே, விமர்சகர்களே வாசகர்களே நீங்களும் பரிட்சித்துப்பாருங்கள். ஒரு எச்சரிக்கை தார்மீக கோபம் அதிகமுள்ளவர்களுக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வாந்தி வரவும் வாய்ப்புண்டு. Here is the Rub. I FIND A FUNNY SIDE TO EVERY THING SERIOUS நேர்மையும் நல்ல உண்மையும் உள்ளவர்கள் இந்த இலக்கிய அரசியல்வாதிகளின் ஆஷாடபூதித் தனத்தையும், வேஷத்தையும், நிஜகோரமுகங்களையும் பார்க்க நேரும் போது சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சிரிப்பு சுந்தரராமசாமி 'கோவில் மாடும் உழவுக்காளையும்' கதையில் சொல்வது போல 'அந்த சிரிப்பு அழுகைக்குப் பதிலாக வருமே அந்த சிரிப்பு'

I LAUGH. NOT BECAUSE THERE IS LAUGHTER
IN MY HEART

BUT JUST TO PREVENT
MY TEARS

IF I DONT LAUGH
I MAY START CRYING - NIETSCHE



DISCRIMINATION THY NAME IS NANJIL NADAN!
நாஞ்சில் நாடனின் நடுநிலைமை ஒரு Myth அந்த Myth உடைந்துவிட்டது என்பது தான் உண்மை பரிதாபம் தான்! ஏனென்றால் இவருடைய USP. அதாவது UNIQUE SELLING PROPOSITION என்பதே இவர் நடுநிலையாளர் என்ற Image தான் ஆனால் இவருடைய நடு நிலைமையின் பக்கசார்புகள்! பற்றி ஒரு ஆராய்ச்சி மாணவர் DOCTORATE செய்யலாம். நாஞ்சில் நாடனின் நடுநிலமை பக்கசார்புகள்! "ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை"க்கு எதிர்வினை உடனே எழுதுவார். தன்னுடைய கடிதத்தை ஜெயமோகன் திருத்தினால் அது பற்றி எதிர் வினை செய்யமாட்டார் இது சில்லறை விவகாரம். 'நாச்சார் மட விவகாரம்' கதைக்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்ட போது இவர் போடமாட்டார். ஜெயமோகனுக்கு அதற்காக ஒரு கடிதம் மட்டும் எழுதுவார். ஜெயமோகன் அடாவடியாக தமிழின் முக்கிய படைப்பாளியான எம்.ஜி.சுரேஷ் படைப்புகளை ஒட்டு மொத்தமாக நிராகா¢த்து விமர்சனம் செய்யும் போது ஏன் என்று கேட்கமாட்டார். ஆனால் அதற்கு எம்.ஜி.சுரேஷ் எதிர்வினையாற்றும் போதுமட்டும் "ஜெயமோகன் உன் மேலே நல்ல அபிப்ராயம் (?!) வைத்திருந்தான் அதை நீ கெடுத்துக் கொண்டாய்'' என்று அபிப்ராயம் சொல்வார், நடுநிலைமையின் ஒரு பக்கசார்பு CALIBER இல்லாத எழுத்தாளன் நாஞ்சில் நாடன் என்று நெருடுவது இங்குதான்.

இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பெயரை கவனமாக உச்சரிக்க மறந்து, ஜெயமோகன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வேதசகாய குமாரை பெரிய விமர்சகர் என்பதாக அபிப்ராயப்படுகிறார். இதுதான் நடுநிலைமையின் பக்கசார்பு என்பது. இப்படி ஜெயமோகனுக்கு ரகசியமாக ஷேக்ஹேண்ட் கொடுத்து, வாலை பட பட வென்று ஆட்டுவதை இனியும் மறைக்க முடியாது. நாஞ்சில் நாடன் நடுநிலையாளனே அல்ல. ஒரு மோசமான நாலாந்தர அரசியல்வாதி. HE CAN SMILE AND SMILE AND BE A VILLAIN.

காலச்சுவடுக்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலேயே (தன்படைவெட்டிச்சாதல் வேண்டாம்) என்னைப் பற்றி அவதூறுகள் அதிகம்தான் திண்ணையில் வெளியானதில் கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியம். "கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை அபிநயம்” இது காலச்சுவடு கூடுதலாக திண்ணையில் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவுரையும் செய்முறையும்' என்றெல்லாம் எழுதிய கைகள் வினையை விதைத்துவிட்டன. வினையை விதைத்த நாஞ்சில் நாடனும் ஜெயமோகனும் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். காலச்சுவடில் பிரசுரமான விஷயங்களே ஜெயமோகனுக்கான ஆலாபனை, பிர்கா, சங்கதி போட்டு பாடப்பட்டது தான் வினையை விதைத்தவர்களே! வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். கழுதையைப் புணர்ந்த ரவுடியாக நான் நடித்த போது கழுதையாக நடித்தவர் யார்? HERE IS THE RUB!